பக்கம் எண் :

New Page 1

 

       காப்புப் பருவம்

103s

பொய்யடிமை இல்லாத   

7.     பொய்அடிமை இல்லாத செய்யுளின் இலக்கியம்
        புகல்இலக் கணம்மெய்ஞ்ஞானம்
    போதநூல் ஆதியா யாவும்அரில் தபஉணர்பு
        புரகரனை யேதுதித்து
    மெய் அடிமை வாய்ந்தசங் கப்புலவர் முதலாய
        வித்தக ஒழுக்கம்மிக்கார்
    விண்மருவு வார்பரவும் எண்மரும்எம் இருதயம்
        விடாதமர ஏத்தெடுப்பாம்
    செய்யமலர் ஆதனம் இருந்துபல சாதியும்
        சேரப் படைத்ததேவும்
    செப்பரிய ஆயஅவ் அச்சாதி குறிகுணம்
        செய்கைகுடி கொள்ளும்இயல்பு
    வெய்யமொழி உணவுமுன் விரித்தெலாம் அறியவலர்
        மெய்அறிஞர் எனல்விளக்கி
    மேம்பட்ட வேளாண் குலக்கதிர் எனும்குன்றை
        விமலனைக் காக்கஎன்றே

    [அ, சொ] செய்யமலர்-செந்தாமரை மலர், ஆதனம்-ஆசனம், இருப்பிடம், தேவு-பிரம்மதேவன், வெய்ய-விரும்பத்தக்க, செப்ப அரிய-சொல்ல முடியாத, குறி சமயம், வலர் வல்லவர், கதிர்-சூரியன், விமலனை- தூய்மையுடையவரான சேக்கிழாரை “பொய்யடிமை இல்லாத செய்யுள்” திருத்தொண்டையில் காணப்படும் ஏழாவது பாடல், புகல்-கூறும், மெய்-உண்மை, போத நூல்- ஞான நூல், அரில்-குற்றம், தப-நீங்க, உணர்பு-உணர்ந்து, புரகரன்-முப்புரத்தை அழித்த முக்கண் மூர்த்தி, வித்தகம்-ஞானம், ஒழுக்கம்-நெறி, விண்மருவுவார் ஆகாயத்தில் பொருந்தி வாழும் தேவர்கள், பரவும்-போற்றும், எண்மர்பொய்யடிமை இல்லாத புலவர், புகழ்ச்சோழர், நரசி்ங்க