New Page 1
மேனாள் அகிலம்
தரமெல் லியலா
ஆனா அருள்தன் னைஅளித்
தொருபால்
தானா கஇருத் தியதற்
பரனை
நானா மயல்செய்
வதுநன் றிதுவே
என்று கூறியுள்ளான்.
இறைவன் அகங்காரம்
அற்றவன். அவனுக்கு இத் தத்துவம் இருந்தால் பிட்டுக்கு மண் சுமந்திரான் ; பரவை யாரிடம்
தூதுபோய் இரான். ஆகவே, அவன் நீர் அகங்காரி. இறைவன் தேவர்கள் பொருட்டு நஞ்சை ஆகாரமாகக்
கொண்டவன். “ அருள்கொடு மாவிடத்தை எரியாமல் உண்டவன். “ என்று அப்பரும், “ உலகுய்யகாரின்
மல்கு கடல் நஞ்மது உண்ட கடவுள் “ வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மால்விடம் தான்அமுது
செய்து அருள் புரிந்த சிவன் “ எனச் சம்பந்தரும், “ விடம் சுட வந்தமரர் தொழ அங்கு அலக்கண்
தீர்த்து அவ்விடம் உண்டு, உகந்த அம்மான் “ எனச் சுந்தரரும் இறைவன் விடத்தை உண்டதைக்
குறித்துள்ளனர். ஆகவே, அவன்காரி ஆகாரி. சிவபெருமான் வேதங்கள் காண்டற் கரியன். “ எதிர்
மறை எட்டும்தோறும் வஞ்சனாய் அகல்வான். “ “ வேதங்கிடந்து தடுமாறும் வஞ்சவெளி “ எனப்
பரஞ்சோதியாரும், “ ஆர் அறிவார் என்று அனந்த மறை ஓலமிடும் பேர் அறிவே இன்பப் பெருக்கே
பராபரமே “ எனத் தாயுமானவரும் கூறுதலை அறியவும். இறைவன் பிரணவ வடிவினன். இதனைத் திருமுறைகளில்
வரும் தொடர்களால் நன்கு உணரலாம். “ ஒங்காரத்துள் பொருளாய் உள்ளான், ஓங்காரத் துருவாகி
நின்றானை “ “ உய்ய என் உள்ளத்து ஓங்காரமாய் நின்ற மெய்யா “ என வருதல் காண்க. திருமந்திரத்தில்,
ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்
ஓங்காரத் துள்ளே
உதித்த சராசரம்
ஓங்கார தீதத்
துயிர்மூன்றும் உற்றன
ஓங்கார சீவ பரசிவ
ரூபமே
எனக் கூறப்பட்டு உள்ளதையும்
அறியவும். ஆகவே, அவன் ஓங்காரி.
|