க
காமல், தொழுது ஏத்தெடுத்தல்
செய்வாம் என்று பாடி இருப்பதைக் காணவும்.
சேக்கிழார்
ஒவ்வோர் அடியார்களின் திருவடிகளையும் வணங்கிக் கூறும் இயல்பினர். ஆனால், தொகையடியார்களில்
திருவடிகளை வணங்கிப் பாடும் முறையினைக் கைக்கொண்டிலர். “ பத்தராய்ப் பணிவார்தம் பரிசினைப்
பகருவாம் “ என்றும், “ பரமனையே பாடுவார் தம்பெருமை பாடுவாம் “ என்றும், (சித்தத்தைத் சிவன்பாலே
வைத்தார் புராணத்தில் இக்குறிப்பும் இல்லை.) திருவாரூர்ப் பிறந்தார்களைப் பற்றிச் செப்புகையில்
“ சிறியேனால் உரைக்கலாம் தகைமையதோ “ என்றும், முப்போதும் திருமேனி தீண்டுவார்களைப்
பற்றிக் கூறுகையில் “ அப்பெருந்தகையார் குலப்பெருமையாம் புகழும் பெற்றியதோ “ என்றும், (முழுநீறு
பூசிய முனிவர் பற்றி இத்தகைய குறிப்புக் காணப்பட்டிலது.) ஆனால், அப்பாலும் அடிச்சார்ந்தார்களைப்
பற்றிக் கூறும்போது மட்டும், “ முடியாப் பேறு பெற்றவர்தம் கழல்பரவ அடியேன் முன்னைப் பிறவியினில்
செய்த தவம் பெரியவாமே “ என்று பாடிப் பரவியுள்ளார்.
சேக்கிழார்
இவ்வாறு அப்பாலும் அடிச்சார்ந்தார் திருவடிகட்கு மட்டும் வணக்கம் கூறி, ஏனையவர்கட்கு இவ்வாறு
கூறிற்றிலரே எனில், இதற்குரிய காரணத்தையும் ஈண்டே பகருவாம். “ அப்பாலும் அடிச்சார்ந்தார்
சைவ உலக அடியார்கள் மட்டும் அல்லர். எல்லா உலக அடியார்களும் ஆவார். ஆகவே, அவர்கள் சைவ
மக்களுக்குப் புறம்பானவர்கள். அதனால்தான் சேக்கிழார் வணங்கிற்றிலர், “ என்று உலகம்
கூறவும் கூடும் என்று நினைந்து தம் பெருந்தகைமை தோன்றவே “ பெற்றார்தம் கழல்பரவ அடியேன்
முன்னைப் பிறவியினில் செய்ததவம் பெரியவாமே “ என்று பாடிக் காட்டினர். ஏனைய தொகையடியார்களின்
திருவடியைப் போற்றுதலைக் கூறாமல் போனதற்குக் காரணம், தொகையடியார்கள் பலர் ஆதலின், அவர்களின்
பெருமையில் திளைத்து நின்றமையின் தம்மை மறந்த நிலையில் சென்று விட்டனர் என்க.
(10)
|