பக்கம் எண் :

3

216

             செங்கீரைப் பருவம்

3.    ஒப்பரிய தொண்டர்தம் அருமையும் பெருமையும்
        உவக்கும்அவர் அவர்செய்கையும்
    உவமையில் லாச்செய்கை நுட்பமும் திட்பமும்
        உம்பர்கோன் அருள்தட்பமும்
    தப்பரிய செந்தமிழ்த் தொடைநடையும் அடையும்
        தவாப்பொருள் அணிச்சிறப்பும்
    தமிழ்மறை அடங்குபல மந்தணமும் வெள்ளிடைத்
        தவிரும்வெற் பெனவிளங்க
    வெப்பரிய முழுமதிக் குடைநிழற் றனபாயன்
        மேயஅவை அகம்நயந்து
    வியந்துமெய்ப் பாட்டினொடு பாராட்டி மகிழமேல்
        மேல்விரித் தருளியபிரான்
    செப்பரிய குன்றையம் பதியருள் மொழித்தேவ
        செங்கீரை யாடியருளே
    திருத்தொண்டை நன்னாட்டு வேளாளர் குலதிலக
        செங்கீரை யாடியருளே.

    (அ. சொ) உவக்கும்-மகிழும், செய்கை - செயல், திட்பமும் - நிச்சயமும், உம்பர்கோன் - தேவர்களின்  தலைவனாம் சிவபெருமான், தட்பமும் - தண்மையும், நீங்காத பொருள் அணி - பொருட்சிறப்பும், அணிச் சிறப்பும் தொடை - பாமாலை, தவா - குறையாத, தப்பு - தவறு தமி்ழ்மறை - தேவாரமாம் வேதப்பொருள், மந்தணமும் - இரகசியப் பொருளும், வெள்ளிடத்து அவிரும் வெற்பு - வெள்ளிடைமலைபோல, இது ஒருபழமொழி, அவிரும்-விளங்கும், தவிரும் - தங்கும் வெற்பு - மலை, வெப்பு-வெப்பம், மதிக்குடை - சந்திரவட்டக்குடை, அவையகத்து - சபையில், நயந்து-யாவரும் விரும்பி, மெய்ப்பாட்டினொடு-கண்ணீர்   அரும்பல்,     மெய்ம்மயிர்   சிலிர்த்தல்   முதலான   உடற்கண் தோன்றும் உணர்ச்சி யுடனே.

    விளக்கம் : அமர்நீதி நாயனார் புராணத்துள்  அமர்  நீதியார் அன்புகலந்த தராசுத் தட்டுக்கு நேரே இறைவர்.