New Page 1
“ பெறுமிழலைக் குறும்பர்எனும்
பரம யோகி
பெரிதுவந்துன்
திருவடித்தா மரையைப் போற்றி
விரைமலர் தூய்வந்தனை
செய்கின்றான் “
என்று பாடியருளினார்.
இவற்றிற்குக் காரணம் தொண்டர் அத்துணை அருமையானவர் என்பதனால் அன்றோ?
தொண்டர்கள்
பெருமையுடையவர் என்பது குறித்துப் பாரித்துக் கூறவேண்டா. பெருமைக்கே உறைவிடமானவர்கள். தொண்டர்கள்
இறைவனை நாடவேண்டும் என்பதும் இல்லை. இறைவனே தொண்டர்கள் இல்லம் தேடிச் செல்வன். “ பழங்குடில்தோறும்
எழுந்தருளிய பரனே “ என்ற மணி மொழியார் வாக்கையும் காண்க. சிறுத்தொண்ட நாயனார் இல்லத்திற்கு
இறைவன் செல்கின்றார். செல்கின்ற போது எவ்வாறு சென்றார்? தாம் வழியில் காண்பாரை எல்லாம்
“ சிறுத்தொண்டர் நீர்தாமோ? “ என்று வினவிக்கொண்டே சென்றார் அல்லரோ? எங்கும் நிறைந்துள்ள
இறைவர்க்கு- எல்லாம் அறிந்த இறைவர்க்கு-சிறுத்தொண்டர் இல்லம் தெரியாமலா போயிற்று? தெரிந்திருந்தும்
ஏன் கண்டாரைச் சிறுத்தொண்டர் மனையை வினவிக்கொண்டே சென்றார் “ தொண்டருடைய அருமையும்
பெருமையும் எவர்க்கும் நினைவுபடுத்தவே அன்றோ? இதனை அன்றோ சேக்கிழார் பெருமானார்,
தண்டாத தொருவேட்கைப்
பசியுடையார்
தமைப்போலக்
கண்டாரைச்
சிறுத்தொண்டர்
மனைவினவிக்
கடிதணைந்து
தொண்டானார்க்
கெந்நாளும்
சோறளிக்கும் திருத்தொண்டர்
வண்டார்பூந்
தாரார்இம்
மனைக்குள்ளா
ரோஎன்ன
என்று குறிப்பிட்டுள்ளார்? தொண்டர்கள் பெருமைக் குரியவர் என்பதையும் சேக்கிழார் நன்கு உணர்ந்தவர் ஆதலின்.
|