த
தகையது என்பார் போன்று, ஈண்டுப் பிள்ளை அவர்கள், “ வெப்பரிய முழுமதிக் குடைநிழற்று அநபாயன் “ என்றனர். சேக்கிழார்
பெருமானாரும் மனுச்சோழனது குடையினை, “ தண்ணளி வெண்குடை “ என்று கூறியுள்ளதையும் காண்க.
“ அநபாயன் மேய
அவையில் உள்ளார் மெய்ப்பாட்டினோடு பாராட்டி மகிழ “ என்று கூறியதும் இந்நூல் அரங்கேற்றப்
பட்டபோது, மக்கள் கொண்ட மனநிலையின் மாண்பைப் புலப்படுத்துவதாகும். மெய்ப்பாடு இன்னது என்பதை,
“ உலகத்தார் உள்ள நிகழ்ச்சி ஆண்டு நிகழ்ந்த வாறே, புறத்தார்க்குப் புலப்படுவதோர் ஆற்றான்
வெளிப்படுதல் “ என்று உச்சிமேற் புலவர்கொள் நச்சினார்க்கினியர் விளக்கியுள்ளார். இம்
மெய்ப்பாடுகள் எவ்வெம் முறையில் வெளிப்படும் என்பதை ஒல்காப் பெருமையுடைய தொல்காப்பியம்,
“ நகையே அழுகை
இனிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம்
வெகுளி உவகைஎன்று
அப்பால் எட்டே
மெய்ப்பா டென்ப “
என்று கூறுகிறது.
இத்தகைய மெய்ப்பாடுகளுள்
சில மெய்ப்பாடுகளைக் காட்டி அவையினர் தொண்டர் புராணத்தைச் செவிமடுத்த காரணத்தைக் கொண்டே
ஈண்டு, “ மெய்ப் பாட்டினொடு பாராட்டி மகிழ “ என்று கூறப்பட்டது.
இங்ஙனம் மெய்ப்பாட்டினுடன்
பாராட்டி மகிழ்ந்தனர் அவையினர் என்பதை,
மருவுதிரு முறைசேர்ப்பார்
எழுதுவார் இருந்து
வாசிப்பார்
பொருளுரைப்பார் கேட்டிருப்பார் மகிழ்ந்து
சிரமசைத்துக் கொண்டாடிக்
குதுகலிப்பர் சிரிப்பார்
தேனிப்பார் குன்றைமுனி
சேக்கிழார் செய்த
|