6
6. துங்கம் மிகுந்த
அருந்தவம் மேவிய
தோலா நாத்திரண
தூமாக் கினியருள்
தெல்காப் பியமே
தோன்றும்
இலக்கணமாப்
பங்கம் இலாச்சம்
யாதி அடைந்து
பராம்சிவ
சின்னமுறும்
பாக மரூஉம்பக் குவரே
கேட்கப்
படும்அதி
காரிகளா
அங்கம் எடுத்துழல்
துன்பம் ஒழிந்தின்
படைவது வேபயனா
அற்புதம் மேவிய
தொண்டர் புராணம
தருள்கரு ணைக்கடலே
சங்கம் மரீஇஅமர்
குன்றைத் திருமுனி
தாலோ தாலேலோ
சைவப் பயிர்தழை
யத்தழை யும்புயல்
தாலோ தாலேலோ
[ அ. சொ. ]
துங்கம்-உயர்வு, பெருமை, தோலா-தோல்வியுறாத, நா-நாவினைப் படைத்த, திரணதூமாக்கினி-தொல்
காப்பியர், தொல்காப்பியம் என்பது தமிழ் இலக்கண நூல். தோன்றிய-பொருந்திய, பங்கம்-குற்றம்,
சமயாதி - சமய தீட்சை முதலியவைகளை, அடைந்து - பெற்று, பராம்-பராவும், சிவ சின்னம்-சைவ
அடையாளங்களாகிய திருநீறு, உருத்திராக்கம் முதலியன, மரூஉம்-சேரும், அங்கம்-உடல், சங்கம்-சற்சங்கங்கள்,
மரீஇ-நிறைந்து,குன்றைத்திருமுனி-குன்றத்தூரில் அவதரித்த சேக்கிழார் பெருமானார், புயல்-மேகமே,
பாகம்-மலபரி பாகம், பக்குவர்-சத்தினிபாதத்து உத்தமர். சமயாதி என்பது சமயம் விசோடம்,
நிருவாணம் ஆகிய மூன்று தீட்சைகள்.
விளக்கம் :
தவத்திற்கு இருக்கும் பெருமையும் உயர்வும் மிகுதி. இதனை வள்ளுவர் வகுத்த தவம் என்னும் அதி
|