பக்கம் எண் :

 

       தாலப் பருவம்

323

        பித்தாபிறை சூடிஎனப்
            பெரிதாம்திருப் பதிகம்
        இத்தாரணி முதலாம்உல
            கெல்லாம்உய எடுத்தார்

என்ற பாடலைப் படிக்கும்போது, நவின்றொர்க்கினிமை என்னும் அழகு காணப்படுகின்றதன்றோ?

    அப்பூதியடிகளார் தம் திருமகன் இறந்தனன் எனினும் அதன் பொருட்டு வருந்தாமல், தம் இல்லத்திற்குப் பெறலரும் விருந்தினராக வந்த திருநாவுக்கரசர் இறப்புக் காரணமாக உணவு கொள்ளாது போக நேரிடுமே என்று எண்ணி, இறந்த மகனை மறைத்து அப்பர் பெருமானார்க்கு அமுது படைக்கையில் அப்பர் பெருமானார்,

    “ஐயப் படாஅது அகத்தது உணர்வானைத்
     தெய்வத்தோடு ஒப்பக் கொளல்”

என்ற குறட்பாவுக்கு ஓர் எடுத்துக்காட்டாக உள்ளவர் ஆதலின், அப்பூதியாரை நோக்கி, “உமது மூத்த மகன் எங்கே? என்று வினவியபோது அப்பூதியார், “இப்போது இங்கு அவன் உதவான்” என்றனர்.  இதனினும் நன் மொழி புணர்த்தி இயம்புதற்கு யாது உளது !  இங்ஙனம் இயம்பும் புலமை நம் சேக்கிழார் பெருமானார்க்கே உண்டு.

    தாளறுவன இடைதுணிவன தலைதுமிவன கலைமா
    வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா
    நீளுடல்விடு சரமுருவிட நிமிர்வனமிடை கடமா
    மீளிகொள்கணை படுமுடலெழ விழுவனபல உழையே

    இப்பாடல், ஓசை உடைமைக்கு ஓர் நல்ல எடுத்துக் காட்டன்றோ?

    வீதி விடங்கன் ஏறி வந்த தேரின் சக்கரத்தில் பசுவின் கன்று அகப்பட்டு இறந்தது.  அதனால் வருந்திய பசு தன் துயரை மனுநீதி மன்னன் அறிய அரண்மனை வாயில் மணியை அசைத்தது.  அவ்வோசை கேட்ட மன்னன் ஓடிவந்து