பக்கம் எண் :

உல

326

             தாலப் பருவம்

        உலகெ லாம்உணர்ந் தோதற் கரியவன்
        நிலவு லாவிய நீர்மலி வேணியன்
        அலகில் சோதியின் அம்பலத் தாடுவான்
        மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம் 

    என்ற பாடலில், இறைவன் அருவம், உருவம் அருவுருவம் என்ற வடிவில் திகழ்பவன் என்பதையும், அங்ஙனம் மூவகைத் திருமேனியுடையவன் ஆயினும், வாழ்த்துதற்கும், வணங்குதற்கும் உரியவன் என்பதையும் அறிவித்திருத்தலின், விழுமியது பயத்தல் என்ற அழகு அமைந்திருத்தலைக் காணலாம்.

    சண்டேசுர நாயனாருடைய தந்தைக்கு நல்ல உவமையைக் காட்டுகிறார் சேக்கிழார். இவனைப் பாம்பிற்குச் சமமாக்குகிறார்.  பாம்பு ரத்தினத்தையும் தருகிறது.  விடத்தையும் கக்குகிறது.  அதுபோலச் சண்டே.சுர நாயனாரின் தந்தையான எச்சதத்தன் இரத்தினம் போன்ற சண்டேசுரரைத் தந்தனன்; விடத்தைக் கக்குவது போலச் சண்டேசுர நாயனார் செய்த சிவபூசைக்கு இடர் செய்தனன்.  இதனை விளங்கு உதாரணத்தால் விளக்க வேண்டுமென்பதற்காகவே சேக்கிழார்,

        அருமை மணியும் அளித்ததுவே
            நஞ்சும் அளிக்கும் அரவுபோல்
        இருமை வினைக்கும் ஒருவடிவாம்
            எச்ச தத்தன் உளனானான்

என்று பாடியருளினார்.

    இவ்வாறெல்லாம் சேக்கிழார் பெருமானார் பத்தழகுகளும் தம் நூலில் அமையப் பாடிய காரணத்தால்தான் ஈண்டுத் திரு பிள்ளை அவர்கள் “விளம்பு வனப்பினொடுமேய” என்றனர்.

    முதற்பொருள் ஆதிய மூன்று என்பன முதல், கரு, உரிப் பொருளாகும். இவற்றைத் தொல்காப்பியம்,