பக்கம் எண் :

New Page 1

330

             தாலப் பருவம்

        பெருஞ்சகடு தேர்காட்ட
            வினைஞர் ஆர்ப் பொலிபிறங்க
        நெருங்கியச துரங்கபல
            நிகர்ப்பனவாம் நிறைமருதம்

    நெய்தல்:

புயல்அ ளப்பன எனவலை புறம்பணை குரம்பை
அயல்அ ளப்பன மீன்விலைப் பசும்பொனின் அடுக்கல்
வியல்அ ளக்கரில் விடுந்திமில் வாழ்நர்கள் கொணர்ந்த
கயல்அ ளப்பன பரத்தியர் கருநெடுங்கண்கள்

    பாலை:

        வெங்க திர்ப்பகல் அக்க டத்திடை
            வெய்ய வன்கதிர் கைபரந்
        தெங்கு மிக்கபி ளப்பின் நாகர்தம்
            எல்லை புக்கெரி கின்றன
        பொங்க ழல்தெறு பாலை வெந்நிழல்
            புக்க சூழல் புகும்பகல்
        செங்க திர்க்கனல் போலும் அத்திசை
            திண்மை மெய்த்தவர் நண்ணினார்

என்னும் இவ்வைந்து பாடல்களும் ஐந்திணைகளின் முதற்பொருள்கட்கு ஏற்ற உதாரணங்களாகும்.  இவற்றுள் கருப்பொருள்களும் நிறைந்திருப்பதைக் காணலாம்.

    பெரும்பொழுது  சிறுபொழுதுகட்குரிய பாடல்களும் சேக்கிழார் வாக்கில் உண்டு.

        மயிலொடுங்க வண்டாட
            மலர்க்கமல முகைவிரியக்
        குயில்ஒடுங்கும் சோலையின்மென்
            தளிர்க்கோதிக் கூவிஎழத்
        துயில்ஒடுங்கா உயிர்அனைத்தும்
            துயில்பயிலச் சுடர்வானில்
        வெயில்ஒடுங்கா வெம்மைதரும்
            வேனில்விரி தரும்நாளில்,