ம
மாக மீதுவ ளர்ந்த
கானகம்
ஆகி எங்கும்
மனித்தரால்
போக லாநெறி அன்றி
யும்பரி
கின்ற காதல்
பொலிந்தெழச்
சாக மூலப லங்கள்
துய்ப்பன
வுந்த விர்ந்துத
னித்துநேர்
ஏகி னார்இர
வும்பெ ருங்கயி
லைக்கு லக்கிரி
எய்துவார்
என்பது எழுசீர்க்கழி நெடிலடி
ஆசிரிய விருத்தம்.
பொங்குவிடம் தீர்ந்தெழுந்து
நின்றான் சூழ்ந்த
பொருவில்திருத் தொண்டர்குழாம்
பொலிய ஆர்ப்ப
அங்கையினை உச்சியின்மேல்
குவித்துக் கொண்டங்
கருட்காழிப்
பிள்ளையார் அடியில் வீழ்ந்த
நங்கைஅவள் தனைநயந்த
நம்பி யோடு
நானிலத்தில் இன்புற்று
வாழும் வண்ணம்
மங்குல்தவழ் சோலைமலி
புகலி வேந்தர்
மணம்புணரும்
பெருவாழ்வு வகுத்து விட்டார்
என்பது எண்சீர்க்கழி
நெடிலடி ஆசிரிய விருத்தம்.
போது போயிருள் புலர்ந்திடக்
கோயிலுள் புகுந்தே
ஆதி நாயகர் அயவந்தி
அமர்ந்தஅங் கணர்தம்
பாத மூலங்கள் பணிந்துவீழ்ந்
தெழுந்துமுன் பரவி
மாத ராரையும் கொண்டுதம்
மனையில்மீண் டணைந்தார்
என்பது கலிநிலைத்துறை.
மண்டு போரின்
மலைப்பவர்
துண்ட மாயிட உற்றெதிர்
கண்டர் ஆவி கழித்தனர்
உண்ட சோறு கழிக்கவே
என்பது வஞ்சி விருத்தம்.
இவ்வாறு பல பா
வகைகளைப் பெரிய புராணத்துள் காணலாம்.
|