பக்கம் எண் :

பல

 

       தாலப் பருவம்

341

    பலரும் புரியும் துயர்தான் இதுவோ
        படைமன் மதனார் புடைநின் றகலார்
    அலரும் நிலவும் மலரும் முடியார்
        அருள்பெற் றுடையார் அவரோ அறியார்

என்பதையும்,

        ஏரின் மல்கு வளத்தி னால்வரும்
            எல்லை இல்லதொர் செல்வமும்
        நீரில் மல்கிய வேணி யார்அடி
            யார்தி றத்து நிறைந்ததோர்
        சீரின் மல்கிய அன்பின் மேன்மை
            திருந்த மன்னிய சிந்தையும்
        பாரின் மல்க விரும்பி மற்றவை
            பெற்ற நீடு பயன்கொள்வார்

என்பதையும்,

        தாளில்வாழ் செருப்பர்தோல்
            தழைத்தநீடு தானையார்
        வாளியோடு சாபம்மேவு
            கையர்வெய்ய வன்கணார்
        ஆளியேறு போலஏகும்
            அண்ணலார்முன் எண்ணிலார்    
        மீளிவேடர் நீடுகூட்டம்
            மிக்குமேல் எழுந்ததே

என்பதையும்,

        துடிஅடியன மடிசெவியென
            துறுகயமுனி தொடரார்
        வெடிபடவிரி சிறுகுருளைகள்
            மிசைபடுகொலை விரவார்
        அடிதளர்வுரு கருவுடையன
            அணைவுறுபிணை அலையார்
        கொடியனஎதிர் முடுகியும்உறு
            கொலைபுரிசில் மறவோர்

என்பதையும்,