பக்கம் எண் :

New Page 1

352

       சப்பாணிப் பருவம

 

தெய்வம், விருந்து ஒக்கல் தான் என்றாங்கு ஐம்புலத்தாறு ஒம்பல்தலை” என்னும் குறட்பாவின் கருத்துச் செவ்வனே அமைத்துள்ளதை ஊன்றி நோக்கினால் உணரலாம்.  “கடவுள் போற்றி” என்பதனால் தெய்வத்தையும், “விருந்தும்” என்பதனால் விருந்தையும், “கிளையும் தாங்கி” என்பதனால் ஒக்கலையும், “குடிகள் ஓங்கி” என்பதனால் தன்னைச் சுட்டியுள்ளமையையும் காண்க.  பரிமேலழர் தான் என்பதை விளக்கும் போது, ‘எல்லா அறங்களும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஓம்புதலும் அறமாயிற்று’ என்று எழுதினர்.  குடிகள் மக்கள் ஆதலின், அம்மக்கள் தான் என்னும் குறளின் பொருளைத் தழுவி நிற்றலின், அவர்களும் தம்மை ஓம்பிக்கொண்டால் அன்றி ஓங்க முடியுமோ? ஆகவே, குடிகள் ஓங்கி என்றனர்.  மேலும், சேக்கிழார் வாக்கிலும் “மிகுதிகொண்டு அறங்கள் பேணி” என்னும் தொடர் அன்றோ பரிமேலழகரையும் “எல்லா அறங்களையும் தான் உளனாய் நின்று செய்ய வேண்டுதலின் தன்னை ஒம்புதலும் அறனாயிற்று” என்று எழுதத் துணையலாயிற்று?

    பரிமேலழகர் தென்புலத்தார் என்பதற்கு நேர்மையான பொருள் கண்டிலர்.  அவர் கண்டது தென்புலத்தார் என்பதற்குப் பிதிரர் என்பது.  ஆனால், குன்றைக் கோமகனார் தென்புலத்தார் என்பதற்கு குரவர் என்று தமது நுண்மாண் நுழை புலனால் கண்டனர்.  குரவர் ஆவர் பெரியோர்கள்.  அதாவது அறிவால் மிக்கவர்.  புலம் என்னும் சொல் அறிவு என்னும் பொருளது.  தென்புலத்தார் என்னும் தொடர் அழகிய அறிவினையுடைய பெரியோர் என்பதாகும்.  இவ்வாறு வள்ளுவர் கருத்தும் ஆகும் என்பது சேவை காவலரின் அழுத்தமான கருத்தாகும்.  இதுவேதான் கருத்து என்பதை இளங்கோ வாக்கால் அறிவிப்பின் எவர்தாம் ஏற்கா தொழிவர்?

    அறவோர்க் களித்தலும் அந்தணர் ஓம்பலும்
    துறவோர்க் கெதிர்தலும் துறந்த என்னை