பக்கம் எண் :

New Page 1

 

       சப்பாணிப் பருவம்

361

கொண்டு நன்கு அறியலாம்.  இதனை உறுதிப்படுத்துதற்கு உகந்த செய்யுள்,

இங்கிதன் நாமம் கூறின் இவ்வுலகத்து முன்னாள்
தங்கிருள் இரண்டில் மக்கள் சிந்தையுள் சார்ந்து நின்ற
பொங்கிய இருளை ஏனைப் புறஇருள் போக்குகின்ற
சங்கதி ரவன்போல் நீக்கும் திருத்தொண்டர் புராணம்
                                           ( என்பாம்

என்பது.  அநபாயனது அஞ்ஞான இருளை நீக்கி மெய்ஞ்ஞான ஒளியைத் தந்தமையின் பானு எனப்பட்டார் என்றும் சொல்லலாம்.

    குன்றத்தூர்க் காட்சிக்கு இனிமையாக இருத்தலின் தமிழ்க் குன்றை எனப்பட்டது.  தமிழ் என்னும்   மொழி   இனிமை   என்று  பொருள்  தருதலை,    “வண்டு   தமிழ்ப்   பாட்டு இசைக்கும்,   தமிழ் மாருதம்,   தமிழ்   தழீஇய  சாயலவர்  என்ற  தொடர்களில் காண்க                                    

(32)

2.    கார்க்கோல மாலோள் புரந்தருன்வன் எனும்மொழிமு
          கமன்உண்மை வேளாண்மையைக்
      கருதஅபி தானம்கொள் குலமே எனப்பல்நூல்
          கற்றவர்இயம்ப மறையோர்
      போர்க்கோல மன்னர்எட் டியர்மூவர் புறம்எனப்
          புகல்மூவர் பசிவருத்தம்
      போக்கினம் எனக்களிப் புறஇலே கரும்அது
          புகன்றுமகிழ் தலைசிறப்ப
      வார்க்கோல முலைமங்கை பங்கர்தளி முன்பலவும்
          வண்பூசை யொடுசிறப்பு
      மாறாது பொலியமழை வளனும் சிறப்பஅள
          வாப்பெருமை வாய்ந்தமேழி
      தார்க்கோ லொடும்தொடும் செங்கைத் தலம்கொண்டொர்
          சப்பாணி கொட்டியருளே
      தண்டமிழ்க் குன்றையாம் குன்றுதித் தெழுபானு
          சப்பாணி கொட்டியருளே