பக்கம் எண் :

புகழ

 

       காப்புப் பருவம்

97

    புகழ் என்னும் அடை உற்றவர் சிறம்புலி நாயனார்.  இவர் புகழ் என்னும் அடையுற்றதைச் “சீர்கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலி” எனச் சுந்தரர் தம் பாட்டில் சொல்லி இருப்பதைக் காண்க.  இவர் சோழ நாட்டில் திருவாக்கூரில் வேதியர் குலத்தில்  பிறந்தவர்.  அடியவர்கட்கு அமுது ஈந்து வந்தவர்.  பொருளையும் கொடுத்து வந்தவர்.  இறைவனது ஐந்து எழுத்தை ஓதியும் யாகம் செய்தும் இறைவன் திருவருளைப் பெற்றவர்.

    இவர் புகழ் என்னும் அடையினைப் பொருத்தப் பெற்றவர் என்பதை நன்முறையில் எடுத்துச் சேக்கிழாரும்,

        ஆலைசூழ் பூகவேலி அத்திரு
            ஆக்கூர் தன்னில்
        ஞாலமார் புகழின் மிக்கார்
            நான்மறைக் குலத்தின் உள்ளார்
        நீலமார் கண்டத் தெண்தோள்
            நிருத்தர்தம் திருத்தொண் டேற்ற
        சீலராய்ச் சாலும் ஈகைத்
            திறத்தனில் சிறந்த நீரார்

என்று மொழிந்திருப்பதைக் காண்க.

    கொடை என்னும் அடையினைப் பெற்றவர், கழறிற்று அறிவார் நாயனார்.  இதனைத் திருத் தொண்டத் தொகையில் “கார்கொண்ட கொடைக் கழறிற்றறிவார்” எனச் சிறப்பிக்கப்பட்டிருதலைக் கொண்டு அறியலார்.

    இவர் சேர நாட்டில் கொடுங்கோளூரில் சேரர் மரபில் பிறந்தவர்.  இவரது பெயர் பெருமாக்கோதை என்பது.  இவர் திருவஞ்சைக் களத்தலத்தில் தொண்டு புரிந்து வந்தார்.  அந்நாளில் செங்கோற்பொறையன் அரச பதவி துறந்து வனம் ஏகினான்.  அப் பதவியை ஏற்க அமைச்சர்கள் பெருமாக் கோதையாரை வேண்டினார்கள்.  இதுவும் சிவ பெருமான்  திருவருள் என்று கொண்டு, இறைவரிடம் “யாரும்