New Page 1
48 |
சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம் |
செ. 6.
சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு, சந்திரன் ராகு கேதுக்களால் விழுங்கப்படுதல் ;
இதற்குக் காரணம். ராகு கேதுக்கள் வரலாறு, சேக்கிழார் முன் பதஞ்சலி முனிவர் வருதற்கு அஞ்சுதல் ;
சேக்கிழார் ஒரு தூக்கில் (ஒரு பாட்டில்) ஏழு பரவைகளை (கடலையும்) பரவை எனும் சொல்லையும் எளிதில்
நிறுத்தியவர் எனல் குன்றத்தூர் மாளிகைகளின் மாண்பு, இதில் பேத உபாயம் உளது. பக்கம்
571-575
செ. 7.
இறையனார் களவியல் இலக்கண நூல் செய்தது, மாதர் வர்ணனை, கன்னியர் சந்திரனைத் தொழுதல், சேக்கிழார்
கவி, கமகன், வாதி, வாக்கி ஆவார் எனல். இதில் தான உபாயம் உளது. பக்கம் 576-591
செ. 8.
திருஞான சம்பந்தர் கூனைப் போக்கியது ; சுந்தரர் கூனை நீக்கியது ; சேக்கிழார் தம் பாடலில்
“ கூன் “ எனும் உறுப்பையும் அமைக்காமை, சேக்கிழார் நாவலர்களால் போற்றப்படுபவர். இதில்
தான உபாயம் உளது. பக்கம் 591-597
செ. 9.
சமணர் இயல்பு, சேக்கிழார் சந்திரனது களங்கம் போக்குவார், சேக்கிழார் சந்திரன்மாட்டு வைத்த
கருணை, குன்றத்தூர் நீர்வளம். இதில் தான உபாயம் உளது பக்கம் 597-600
செ. 10.
சேக்கிழார் சினம் கொள்ளுதற்கு முன் சந்திரனை வருக எனல், குன்றத்தூர் மாண்பு. இது தண்ட உபாயம்
கூறுவது. பக்கம் 600-604
8. சிற்றில் பருவம்
செய்யுள்
1. சிறுமியர் முத்தால் சிறு வீடு கட்டி விளையாடுதல் ; சேக்கிழாராம் குழந்தையைச்
சிற்றிலைச் சிதைக்காதிருக்க வேண்டுதல், தெய்வலோகம் அளவு குன்றத்தூர் மரங்கள் உயர்ந்து
வளர்ந்திருத்தல்,தேவர்
|