New Page 1

48

சேக்கிழார் பிள்ளைத் தமிழ்ப் பாடல்களில் அமைந்த கருத்துச் சுருக்கம்

     செ. 6. சேக்கிழார்க்கும் சந்திரனுக்கும் உள்ள வேறுபாடு, சந்திரன் ராகு கேதுக்களால் விழுங்கப்படுதல் ;  இதற்குக் காரணம்.  ராகு கேதுக்கள் வரலாறு, சேக்கிழார் முன் பதஞ்சலி முனிவர் வருதற்கு அஞ்சுதல் ;  சேக்கிழார் ஒரு தூக்கில் (ஒரு பாட்டில்) ஏழு பரவைகளை (கடலையும்) பரவை எனும் சொல்லையும் எளிதில் நிறுத்தியவர் எனல் குன்றத்தூர் மாளிகைகளின் மாண்பு, இதில் பேத உபாயம் உளது.  பக்கம் 571-575

     செ. 7. இறையனார் களவியல் இலக்கண நூல் செய்தது, மாதர் வர்ணனை, கன்னியர் சந்திரனைத் தொழுதல், சேக்கிழார் கவி, கமகன், வாதி, வாக்கி ஆவார் எனல்.  இதில் தான உபாயம் உளது.  பக்கம் 576-591

     செ. 8. திருஞான சம்பந்தர் கூனைப் போக்கியது ;  சுந்தரர் கூனை நீக்கியது ;  சேக்கிழார் தம் பாடலில்  “ கூன் “  எனும் உறுப்பையும் அமைக்காமை, சேக்கிழார் நாவலர்களால் போற்றப்படுபவர்.  இதில் தான உபாயம் உளது.  பக்கம் 591-597

       செ. 9. சமணர் இயல்பு, சேக்கிழார் சந்திரனது களங்கம் போக்குவார், சேக்கிழார் சந்திரன்மாட்டு வைத்த கருணை, குன்றத்தூர் நீர்வளம்.  இதில் தான உபாயம் உளது பக்கம் 597-600 

     செ. 10. சேக்கிழார் சினம் கொள்ளுதற்கு முன் சந்திரனை வருக எனல், குன்றத்தூர் மாண்பு.  இது தண்ட உபாயம் கூறுவது.  பக்கம் 600-604

 8. சிற்றில் பருவம் 

       செய்யுள் 1.  சிறுமியர் முத்தால் சிறு வீடு கட்டி விளையாடுதல் ;  சேக்கிழாராம் குழந்தையைச் சிற்றிலைச் சிதைக்காதிருக்க வேண்டுதல், தெய்வலோகம் அளவு குன்றத்தூர் மரங்கள் உயர்ந்து வளர்ந்திருத்தல்,தேவர்