முன் பக்கம் |
முகப்பு |
தேடுதல் |
11 முதல் 20 வரை
|
|
11. ஓதலி னன்றே வேதியர்க்
கொழுக்கம் |
(பதவுரை) வேதியர்க்கு - பிராமணருக்கு,
ஒழுக்கம் -ஆசாரமானது, ஓதலின் - (வேதம்)
ஓதலினும், நன்றே- நல்லது.
(பொழிப்புரை) பிராமணருக்கு வேதம் ஓதுவதைக்
காட்டிலும் நல்லொழுக்கம்
சிறந்தது. |
|
|
|
|
12. ஒளவியம் பேசுத லாக்கத்திற்
கழிவு |
(பதவுரை) ஒளவியம் - பொறாமை வார்த்தைகளை,
பேசுதல்- (ஒருவன்) பேசுதல், ஆக்கத்திற்கு -
(அவன்) செல்வத்திற்கு, அழிவு - கேட்டைத் தருவதாகும்.
(பொழிப்புரை) ஒருவன் பொறாமை வார்த்தை பேசுவது
அவன்செல்வத்திற்கு அழிவைத்
தரும். |
|
|
|
|
13. அஃகமுங் காசுஞ் சிக்கெனத்
தேடு |
(பதவுரை) அஃகமும் - தானியத்தையும்,
காசும் - திரவியத்தையும், சிக்கெனத் தேடு -
வீண்செலவு செய்யாமற் சம்பாதி.
(பொழிப்புரை) தானியத்தையும் திரவியத்தையும் வீண்
செலவு செய்யாமல் தேடிக்கொள். |
|
|
|
|
14. கற்பெனப் படுவது சொற்றிறம்
பாமை |
(பதவுரை) கற்பு எனப்படுவது - (பெண்களுக்குக்)
கற்பென்று சொல்லப்படுவது, சொல் - (கணவர்) சொல்லுக்கு,
திறம்பாமை - தப்பி நடவாமையாம்.
(பொழிப்புரை) மகளிர்க்குக் கற்பு என்று
சொல்லப்படுவது கணவர் வார்த்தைக்கு மாறுபட்டு
நடவாமையாம். |
|
|
|
|
15. காவ றானே பாவையர்க்
கழகு |
(பதவுரை) காவல்தானே - (கற்புக்கு அழிவு வராமல்
தம்மைக்) காத்துக்கொள்வதுதானே, பாவையர்க்கு - பெண்களுக்கு,
அழகு - அழகாகும்.
(பொழிப்புரை) கற்பினின்று வழுவாமல் தம்மைக்
காத்துக் கொள்வதே மாதர்களுக்கு
அழகாகும். |
|
|
|
|
16. கிட்டா தாயின் வெட்டென
மற |
(பதவுரை) கிட்டாதாயின் - (இச்சித்த ஒரு பொருள்)
கிடையாதானால், வெட்டென - சீக்கிரத்தில்தானே,
மற - (அப்பொருளை) மறந்துவிடு.
(பொழிப்புரை) நீ விரும்பிய பொருள்
கிடைக்காவிட்டால், சீக்கிரத்தில் அதனை
மறந்துவிடு. |
|
|
|
|
17. கீழோ ராயினுந் தாழ
வுரை |
(பதவுரை) கீழோர் ஆயினும் -
(கேட்பவர் உனக்குக்) கீழ்ப்பட்டவராய் இருந்தாலும், தாழ - (உன்
சொல்) வணக்கமுடையதாய் இருக்கும்படி, உரை - (அவருடன்)
பேசு.
(பொழிப்புரை) தாழ்ந்தோரிடத்திலும் தாழ்மையாகப்
பேசு. |
|
|
|
|
18. குற்றம் பார்க்கிற் சுற்ற
மில்லை |
(பதவுரை) குற்றம் - குற்றங்களை,
பார்க்கின் - (ஆராய்ந்து) பார்த்தால்,
சுற்றம் - உறவாவோர், இல்லை - (ஒருவரும்)
இல்லை.
(பொழிப்புரை) குற்றத்தையே ஆராய்ந்து பார்த்தால்
சுற்றமாவார் ஒருவருமில்லை. (குற்றமே யில்லாதவர் ஒருவருமில்லை யாகையால் சுற்றத்தார்
அகப்படார் என்பதாம்.) |
|
|
|
|
19. கூரம் பாயினும் வீரியம்
பேசேல் |
(பதவுரை) கூர் அம்பு ஆயினும் - (உன்
கையிலிருக்கிறது) கூர்மை பொருந்திய அம்பானாலும், வீரியம் -
வீரத்தன்மையை, பேசேல் - (வீணாகப்) பேசாதே.
(பொழிப்புரை) உன் கையிலே கூரிய அம்பு இருந்தாலும்,
உன் வீரத்தை வியந்து பேசாதே. |
|
|
|
|
20. கெடுவது செய்யின் விடுவது
கருமம் |
(பதவுரை) கெடுவது - தீமையை,
செய்யின் - (தன் சிநேகன்)செய்தால், விடுவது
- (அவன் சிநேகத்தை) விடுவதே, கருமம் -
நற்செய்கையாம்.
(பொழிப்புரை) தன் நண்பன் தீமையைச் செய்தால்,
அவனது நட்பை விட்டுவிடுவது
நற்செய்கையாம். |
|
|
|
|