211 முதல் 220 வரை
|
|
|
|
211. உலகோரால்
தூற்றப்படுவோன் ஒழிந்துவிடல் நலமாம் |
- ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும்
தேற்றா
னெனப்பட்டு வாழ்தலின்-மாற்றி மனையின் அகன்றுபோய் மாபெருங்
காட்டில் நனையில் உடம்பிடுதல் நன்று.
-
(பதவுரை)
ஆற்றாமை ஊர அறிவின்றி யாதொன்றும் தேற்றான் எனப்பட்டு
வாழ்தலின்-துன்பங்கள் மிக அறிவில்லாமல் தன்னுயிர்க்காவதோர் உறுதி
ஒன்றும் தெரியாதவனெனப் பலரானும் இகழப்பட்டு வாழ்தலினும், மாற்றி மனையின்
அகன்று-இல்வாழ்க்கையை விட்டு மனையி னகன்று, மாபெருங் காட்டில்
போய்-விலங்குகள் வழங்கும் பெரிய காட்டிடைச் சென்று, நனை இல்
உடம்பு இடுதல் நன்று-இனிமை பயவாத அவ்வுடலினை விடுதல் நல்லது.
(குறிப்பு) இன்:
ஐந்தனுருபு, எல்லைப்பொருளது. இடுதல்-போடுதல், இறக்க
(211) | |
|
| |
|
|
|
212. உண்மைச் சுற்றத்தார்
இவரென்பது |
- நல்லறம் எந்தை நிறையெம்மை நன்குணரும்
கல்வியென்
தோழன் துணிவெம்பி-அல்லாத பொய்ச்சுற்றத் தாரும் பொருளோ
பொருளாய இச்சுற்றத் தாரில் எனக்கு.
-
(பதவுரை)
நல்லறம் எந்தை-நல்லறமே என் தந்தை, நிறை
எம்மை-அறிவே என்தாய், நன்குணரும் கல்வி
என்தோழன்-நன்மையை யுணர்தற்குக் காரணமாய கல்வியே என்னுடைய தோழன்,
துணிவு எம்பி-மனத்தெளிவே என்னுடைய தம்பி, பொருளாய இச்
சுற்றத்தாரில் எனக்கு-உறுதிபயக்கும் இச்சுற்றத்தார்போல எனக்கு,
அல்லாத பொய்ச் சுற்றத்தாரும் பொருளோ-இவையில்லாத தந்தை தாய்
தோழன் உடன் பிறந்தவர்களாகிய பொய்ச்சுற்றத்தார் உறுதி பயப்பரோ?
பயவார்.
(குறிப்பு)
என்+அம்மை=எம்மை. எம்+தம்பி=எம்பி. ஓ: எதிர்மறை
வினாப்பொருளது. இல்: ஐந்தனுருபு; ஒப்புப் பொருள். நிறை-மனவடக்க
மெனினுமாம். (212) | |
|
| |
|
|
|
213. பொய்ச்சுற்றத்தார்
இவரென்பதும், அவரால் வருந்துயரமும் |
- மக்களே பெண்டிர் மருமக்கள் தாய்தந்தை
ஒக்க
உடன்பிறந்தார் என்றிவர்கள்-மிக்க கடும்பகை யாக உழலும்
உயிர்தான் நெடுந்தடு மாற்றத்துள் நின்று.
-
(பதவுரை)
மக்களே பெண்டிர் மருமக்கள் தாய் தந்தை ஒக்க உடன்பிறந்தார் என்ற
இவர்கள்-மக்களும் மனைவியரும் மருமக்களும் தாய் தந்தையரும் தன்னுடன்
பிறந்தாருமாகிய இவர்கள், மிக்க கடும் பகையாக-இன்பம் பயப்போர்
போன்றே மிகக் கொடிய துன்பத்தைச் செய்வதால், உயிர்-உயிரானது,
நெடுந் தடுமாற்றத்துள் நின்று உழலும்-மிக்க கலக்கத்துக்குக்
காரணமாய உலக வாழ்க்கையிடைப் பட்டு வருந்தும்.
(குறிப்பு)
என்ற+இவர்கள்=என்றிவர்கள்; அகரத்தொகுத்தல். தான்: அசைநிலை. ஏ:
எண்ணுப்பொருளது. பகையாக: காரணப்பொருளில் வந்த செயவென் வாய்பாட்டு
வினையெச்சம்.
(213) | |
|
| |
|
|
- அளற்றகத்துத் தாமரையாய் அம்மலர்ஈன்
றாங்கு
அளற்றுடம் பாமெனினும் நன்றாம்-அளற்றுடம்பின் நன்ஞானம் நற்காட்சி
நல்லொழுக்கம் என்றவை தன்னால் தலைப்படுத லான்.
-
(பதவுரை)
அளற்றகத்து ஆய்தாமரை அம்மலர் ஈன்றாங்கு-சேற்றினிடத்து வளர்ந்த
தாமரை அழகிய மலர்களை ஈனுதல் போல, அளற்றுடம்பின் நன் ஞானம் நற்காட்சி
நல்லொழுக்கம் என்றவை-தூயதல்லாத உடம்போடு கூடி நின்றவழியே நன்ஞானம்
நல்லறிவு நல்லொழுக்கம் என்பன, தன்னால் தலைப்படுதலான்-ஒருவனால்
அடையக்கூடுமாதலால், உடம்பு அளறு ஆம் எனினும் நன்றாம்-உடம்பு
மலமயமானதேயெனினும் அதனோடு கூடிவாழ்தலே நல்லது.
(குறிப்பு) ஆங்கு:
உலம உருபு, எனினும்: உம்மை இழிவு சிறப்பு. அளறு-கு
(214) | |
|
| |
|
|
|
215. மயக்கவுணர்வால் வரும்
துன்பங்கள் |
- தேற்றமில் லாத ஒருவனைப் பின்னின்றாங்(கு)
ஆற்ற
நலிவர் இருநால்வர்-ஆற்றவும் நல்லார்போல் ஐவர் பகைவளர்பார்
மூவரால் செல்லும் அவன்பின் சிறந்து.
-
(பதவுரை)
தேற்றம் இல்லாத ஒருவனை-உண்மைப்பொருளின் தன்மை இதுவெனத் தெளியாத ஒருவனை, இரு நால்வர் பின்னின்று ஆற்ற நலிவர்-அப்பிரத்தியாக்கியான
குரோதம் முதலிய வெட்டும் பின்பற்றி மிக மெலிவிக்கும், ஐவர் நல்லார் போல
ஆற்றவும் பகைவளர்ப்பர்-மெய் முதலிய பொறிகளைந்தும் இன்பம் பயப்பன
போன்று மிக்க துன்பத்தையே வளர்க்கும், மூவரால் அவன்பின் சிறந்து
செல்லும்-ஐவளி பித்து என்னும் மூன்றன் மாறுபட்டால் அவன் பின்
மரணமடைவான்.
(குறிப்பு) "இரு
நால்வர்" என்றது எண்வினையை. அவை அப்பிரத்தி யாக்கியான குரோதம்,
அப்பிரத்தியாக்கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான
லோபம், பிரத்தியாக்கியான குரோதம்-பிரத்தியாக்கியான மானம், பிரத்தியாக்கியான
மாயை, பிரத்தியாக்கியான லோபம் என்பன. "பின் சிறந்து செல்லும்" என்பது
மங்கல வழக்கு. இதனால் உண்மை யுணர்வில்வழி வருவதோரிழுக்குக்
கூறப்பட்டது. ஆங்கு: அசைநிலை. (215) | |
|
| |
|
|
|
216. அறிவாளிகட்கே
உண்மைப்பொருள் உணர்த்தலாகும் |
- அருவினையும் ஆற்றுள் வருபயனும் ஆக்கும்
இருவினையும்
நின்ற* விளைவும்-திரிவின்றிக் கண்டுணர்ந்தார்க் கல்லது காட்டதரும்
நாட்டதரும் கொண்டுரைப்பான் நிற்றல் குதர்.
*இருவினையுநின்று.
(பதவுரை)
அருவினையும் ஆற்றுள் வருபயனும்-துறவையும் அத் துறவின்கண் எய்தும்
பயனையும், ஆக்கும் இருவினையும் நின்ற விளைவும்-உலகோர் செய்யும்
நல்வினை தீவினைகளையும் அவற்றால் எய்த நின்ற இன்ப துன்பங்களையும், திரிவு
இன்றிக் கண்டு உணர்ந்தார்க்கல்லது-உள்ளவாறே ஆராய்ந்து அறிய
விரும்புவோர்க்கன்றி, காட்டதரும் நாட்டதரும்-உலக நெறியையும்,
வீட்டு நெறியையும், கொண்டுரைப்பான் நிற்றல் குதர்-உட்கொண்டு
சொல்லத் தொடங்குதல் வீணேயாகும்.
(குறிப்பு)
அதர்-வழி; நெறி. உலகப்போக்கு, பல பெருந் துன்பங்கள் மலிந்து நிற்றலின்,
?காட்டதர்? எனப்பட்டது. வீட்டு நெறி; காரண காரியங்களாற் கூறி நாட்டிச்
செய்கின்றமையின், ?நாட்டதர்? எனப்பட்டது.
(216) | |
|
| |
|
|
|
217. அறநெறிச்சாரத்தால்
அறிவு விளங்கும் |
- ஆதியின் தொல்சீர் அறனெறிச் சாரத்தை
ஓதியுங்
கேட்டும் உணர்ந்தவர்க்குச்--சோதி பெருகிய உள்ளத்த ராய்வினைகள்
தீர்ந்து கருதியவை கூடல் எளிது.
-
(பதவுரை)
ஆதியின் தொல்சீர் அறநெறிச்சாரத்தை-முதற்கடவுளால் அருகனது
பழமையான புகழை விளக்கும் இவ் அறநெறிச்சாரத்தினை, ஓதியும் கேட்டும்
உணர்ந்தவர்க்கு-கற்றும் கேட்டும் அறிந்தவர்கட்கு, கருதியவை கூடல்
எளிது-கருதிய காரியங்கள் எளிதில் முடியும், சோதி பெருகிய
உள்ளத்தராய் வினைகள் தீர்ந்து-அவர் ஞானவொளி பெருகிய மனத்தவராய் இருவகை
வினைகளினின்றும் நீங்கப் பெருவதால்.
(குறிப்பு)
உணர்ந்தவர், உள்ளத்தவராய், தீர்ந்து கூடல் எளிது என
முடிக்கலுமாம் (217) | |
|
| |
|
|
|
218. அறநெறிச்சாரம் வீட்டினை
யடைவிக்கும் |
- எந்நூல்கள் ஓதினும் கேட்பினும்
என்செய்யும்
பொய்ந்நூல் அவற்றின் பொருள்தெரிந்து--மெய்ந்நூல் அறநெறிச்
சாரம் அறிந்தான்வீ டெய்தும் திறநெறிச் சாரந்
தெளிந்து.
(பதவுரை)
பொய்ந்நூல் எந்நூல்கள் ஓதினும் கேட்பினும் அவற்றின் பொருள் தெரிந்து
என்செய்யும்-பொய்ந்நூல் களாகிய மற்றை நூல்களைக் கற்றும் கேட்டும்
அவற்றின்பொருளையறிதலால் யாது பயன்? மெய்ந்நூல் அறநெறிச்சாரம்
அறிந்தான்-உண்மை நூலாகிய இவ் அறநெறிச்சாரத்தினைக் கற்றும் கேட்டும்
அறிந்தவன், திறநெறிச்சாரம் தெளிந்து-உறுதி பயக்கும் நெறியின்
பயனை அறிந்து அந் நெறியில் நின்று, வீடு எய்தும்-வீடு பேற்றினை
அடைவான்.
(குறிப்பு)
அறிந்தான்: வினையாலணையும் பெயர்.
(218) |
|
|
| |
|
|
|
219. சிவனைச் சிந்திக்க
அவமேதும் இல்லை |
- அவன்கொல் இலன்கொலென் றையப் படாதே
சிவன்கண்ணே
செய்ம்மின்கள் சிந்தை--சிவன்றானும் நின்றுகால் சீக்கும் நிழறிகழும்
பிண்டிக்கீழ் வென்றிச்சீர் முக்குடையான் வேந்து.
-
(பதவுரை) அவன்கொல் இவன்கொல் என்று ஐயப்படாதே சிவன்கண்ணே சிந்தை
செய்ம்மின்கள்-இறைவனாவான் அவனோ இவனோ என்று ஐயமுறாமல் சிவன்பாலே
சிந்தையை நிறுத்துங்கள், சிவன்றானும்-அச்சிவனும், நின்று
கால் சீக்கும்-எப்பொழுதும் அடைந்தாரது இடரைத் துடைக்கும், நிழல்
திகழும்-அருள்மிக்க, பிண்டிக்கீழ்-அசோகின்கீழ்
எழுந்தருளியிருக்கும், வென்றி-வெற்றியையுடைய,
சீர்-சிறந்த, முக்குடையோன்-மூன்று குடைகளுடை
யவனாகிய, வேந்து-அருகனே யாவான்.
(குறிப்பு) நின்று
கால் சீக்கும் நிழல் திகழும் எண்பதைப் பிண்டிக்கு அடையாக்கி, எப்பொழுதும்
அடைந்தாரது வெம்மையைத் துடைக்கும் குளிர்ச்சி மிக்க என்றுபொருள் கூறினும் பொருந்தும்.
சிந்தையை நிறுத்துதலாவது இடைவிடாது சிந்தித்தல். கொல்:
ஐயப்பொருள். (219) | |
|
| |
|
|
|
220. இறைவனைப் பாடிப் பெற்ற
பரிசில் |
- முனைப்பாடி யானைச்சூர் முக்குடைச் செல்வன்
றனைப்பாடி
வந்தேற்குத் தந்த பரிசில் வினைப்பாடு கட்டழித்து வீட்டின்ப
நல்கி நினைப்பாடி வந்தோர்க்கு நீமீக வென்றான்* நிறைவிளக் குப்போ
லிருந்து.
-
*வந்தோற்கு......நீமீ கென்றான்.
(பதவுரை)
முனைப்பாடியானை சூர் முக்குடைச் செல்வன்றனை-திருமுனைப் பாடியின்கண்
எழுந்தருளியிருப்பவனும் தெய்வத்தன்மைவாய்ந்த மூன்று குடைகளுடைய செல்வனுமாகிய அருகனை,
பாடிவந்தேற்கு-பாடியடைந்த எனக்கு, தந்த
பரிசில்-அவன் அருளிய பரிசிலாவது, வினைப்பாடு
கட்டழித்து-மிக்க வினைத் தொடர்பை அழித்து, வீட்டின்பம்
நல்கி-முத்தியின்பத்தை யருளினதேயன்றி, நிறை,
விளக்குப்போலிருந்து-நந்தாவிளக்கே போன்று விளங்கி,
நினைப்பாடி வந்தோர்க்கும்-உன்னைப்
பாடியடைந்தவர்கட்கும், நீம் ஈக என்றான்-அறிவினை நல்குவாயாக
என்று கூறியருளியதுமாகும்.
(குறிப்பு)
சூர்-தெய்வம். நீம்: நீமம் என்பதன் இடைக்குறை. நீமம்-ஒளி. நினைப்பாடி-நினைத்து
எனலுமாம். இச்செய்யுள் ஐந்தடியால் வந்த பஃறொடை
வெண்பா.
(220)
அறநெறிச்சாரம் மூலமும் விருத்தியுரையும்
முற்றும் |
|
|
| |
|
|