உபாதியெனும் மூன்றாட்டை ஓட்டிவிடு கோனே - உனக்கு உள்ளிருக்குங் கள்ளமெல்லாம் ஓடிப்போங் கோனே. | 119 |
| |
முக்காய மாடுகளை முன்னங்கட்டு கோனே - இனி மோசமில்லை நாசமில்லை முத்தியுண்டாங் கோனே. | 120 |
| |
கன்மபல மாடுகளைக் கடைக்கட்டு கோனே - மற்றக் கன்மத்திர யப்பசுவைக் கடையிற்கட்டு கோனே. | 121 |
| |
காரணக்கோ மூன்றனையுங் கால்பிணிப்பாய் கோனே - நல்ல கைவசமாஞ் சாதனங்கள் கடைப்பிடிப்பாய் கோனே. | 122 |
| |
வேறு பிரமாந்த ரத்திற் பேரொளி காணெங்கள் கோனே - வாய் பேசா திருந்து பெருநிட்டை சாரெங்கள் கோனே. | 123 |
| |
சிரமதிற் கமலச் சேவை தெரிந்தெங்கள் கோனே - முத்தி சித்திக்குந் தந்திரஞ் சித்தத் தறியெங்கள் கோனே. | 124 |
| |
விண்ணாடி வத்துவை மெய்யறிவிற் காணுங் கோனே - என்றும் மெய்யே மெய்யிற்கொண்டு மெய்யறிவிற் செல்லுங் கோனே. | 125 |
| |
கண்ணாடி யினுள்ளே கண்பார்த் துக்கொள்ளுங் கோனே - ஞானக் கண்ணன்றிக்கண்ணாடி காணவொண்ணா தெங்கள் கோனே. | 126 |
| |
சூனியமானதைச் சுட்டுவா எங்குண்டுகோனே - புத்தி சூக்குமமே யதைச்சுட்டு மென்றெண்ணங் கொள் கோனே. | 127 |
| |
நித்திய மானது நேர்படி லேநிலை கோனே - என்றும் நிற்குமென் றேகண்டு நிச்சயங் காணெங்கள் கோனே. | 128 |
| |
சத்தியும் பரமுந் தன்னுட் கலந்தே கோனே - நிட்டை சாதிக்கி லிரண்டுந் தன்னுள்ளே காணலாங் கோனே. | 129 |
| |
மூகைபோலிருந்து மோனத்தைச் சாதியெங்கோனே - பர மூலநிலைகண்டு முட்டுப் பிறப்பறு கோனே. | 130 |