பக்கம் எண் :

சித்தர் பாடல்கள்399


பாங்கில்நின்ற அச்சென்மம் மவுன முத்தி
     பரிவாக வாய்ந்தவர்கள் அறிந்து கொள்ளே.
2
  
அறிந்திருந்த நான்குக்கும் விக்கின முண்டாம்
     அப்பனே! ஆகாயமியஞ் சித்தி னோடே
மறிந்துநின்ற பிராரத்தந் தோயத் தோடு
     மகத்தான நாலுக்கும் விக்கின மாச்சு;
பிரிந்துநின்ற நாலினாற் செய்வதென்ன?
     பேரான வறுமையொடு கிலேசந் துக்கஞ்
செறிந்துநின்ற பெண்பொன்னால் மண்ணினாலே
     சேத்துமத்தி லீப்போலத் தியங்கு வாரே.
3
  
தியங்கினால் கெர்ச்சித்துத் துரத்துச் சண்ணுஞ்
     சீறியர் மிலேச்சரையே சகத்தி னுள்ளே
மயங்கினார் நாலுபா தத்தி னுள்ளும்
     மனஞ்செவ்வை யாவதெப்போ தறிவதெப்போ?
தயங்கினா ருலகத்திற் கோடி பேர்கள்;
     சாவதும் பிறப்பதுங்கா வடிபோ லாச்சு;
துயங்கினார் துயரத்தால் ஞானம் போச்சு;
     சுடுகாட்டில் அறிவதுபோல் சுத்தப்பாழே.
4
  
பாழான மாய்கைசென் றொழிவ தெப்போ?
     பரந்தமனஞ் செவ்வையாய் வருவதெப்போ?
வாளான விழியுடைய பெண்ணைச் சேரும்
     மயக்கமற்று நிற்பதெப்போ? மனமே ஐயோ!
காழான வுலகமத னாசை யெல்லாங்
     கருவறுத்து நிற்பதெப்போ? கருதி நின்ற
கோளான கருவிவிட்டு மேலே நோக்கிக்
     கூடுவது மேதென்றால் மூலம் பாரே.
5
  
மூலமதி லாறுதலங் கீழே தள்ளி
     முதிர்ந்துநின்ற மேலாறு மெடுத்து நோக்கிக்
கோலமுட னுன்மனையைத் தாண்டி யேறிக்
     கொடியதொரு ஞானசக்திக் குள்ளே மைந்தா!
பாலமென்ற கேசரியாம் மவுனத் தூன்றிப்
     பராபரமாம் மந்திரத்தில் ஞானம் முற்றிக்