நக்கத் திடைநடுவே நற்க்கன பொற்பதியில் சொற்கனகத் தற்பதியில் தோன்று. | 81 |
| | |
தோன்றுமே யெல்லாச் சுகமுற்றதில் மனமே தோன்றுமே ஆனந்தச் சுந்தரர்பின் - தோன்றுமே அட்சரச் சுருக்கி னொடும் அக்கரப் பெருக்கமுடன் உச்சரித்து ரைக்கிறவுண்மை. | 82 |
| | |
உண்மை யிதுகாண் ஒளியிருந்த வீடதுகாண் உண்மை சிவனிருக்கும் ஊருகாண் - உண்மை கருமை ஒளியேழ் கதியுள் பதங்கள் மருவுதங்கி நீ வருந்து மாறு. | 83 |
| | |
வருந்தும் பொழுதுகாண் மாயையாய் நெஞ்சே வருந்தும் குணமாக வந்து - வருந்தும் இருவினை தொடக்கறும் ஏழ்வகைப்பிறப்பாம் கருமலத் திருக்கறுங் காண். | 84 |
| | |
காண்மனமே சத்திசிவம் ஒன்றான காரணத்தை காண்மனமே மாலயனுங் காணரிதை - காண்மனமே செம்பொன்னி னம்பலத் துள் சேருஞ்செஞ் சொல்லென்றும் அம்பலத்தில் ஆடுநட னம். | 85 |
| | |
நடனமது பார்மனமே நயனத் திடையே நடனமது நாலாம் பதங்காண் - நடனம் பதிமதிவித் தாய் மனமே பலகதிவித் தாயெனவே அதிவிதசித் தாந்த மாடும். | 86 |
| | |
ஆடும் பதிமனமே அம்பலத்தைச் சுட்டுநடம் ஆடும் பரமகுரு ஆனந்தம் - ஆடுகின்ற கூத்தனை கூற்றிற்ற கூத்தபிரா னையசுத்தம் நீத்தவனைச் சித்தம்வைத்து நில். | 87 |
| | |
நில்லு நிலவறமாய் நேசமுடனே பதியில் நில்லு பிறவியற நீநெஞ்சே - நில்லு கனல்மதியும் கார்மிடறும் கதிரும் மதியும் புனலொடு செஞ்சடையும் போற்றி. | 88 |