ஏலேலோ ஏகரதம் சர்வரதம் பிரமரதம் ஏலேலோ ஏலலிலோ.
பஞ்சபூதப் பலகை கப்பலாய்ச் சேர்த்து பாங்கான ஓங்குமரம் பாய்மரம் கட்டி நெஞ்சு மனம்புத்தி ஆங்காரஞ்சித்தம் மானாபிமானங் கயிறாகச் சேர்த்து
ஐந்தெழத்தைக் கட்டி சாக்காகயேற்றி ஐம்புலன் தன்னிலே சுக்கானிருத்தி நெஞ்சு கடாட்சத்தால் சீனிப்பாய் தூக்கி சிவனுடைய திருப்பொருளை சிந்தையில் நினைந்து
தஞ்சலான வெள்ளத்தில் தானே அகண்டரதம் போகுதடா ஏலேலோ ஏலேலோ. களவையுங் கேள்வையுந் தள்ளுடா தள்ளு- கருணைக்கடலிலே தள்ளுடா கப்பல்
நிற்குணந்தன்னிலே தள்ளுடா தள்ளு- நிறைந்த பரிபூரணத்தால் தள்ளுடா கப்பல் மூக்கணைமுன்றையுந் தள்ளுடா தள்ளு- முப்பாழுக்கப்பாலே தள்ளுடா கப்பல்
திக்குதிசையெங்கும் தள்ளுடா தள்ளு திருமந்திரஞ் சொல்லி தள்ளுடா கப்பல் பக்கமுடன் கீழ்மேலும் தள்ளுடா தள்ளு- பரவெளிக்கப்பாலே போகுதடா கப்பல் ஏலேலோ (ஏலேலோ)
தந்தை தாய் சுற்றமும் சகலமுமறந்து- தாரம் சகோதரம் தானதும் மறந்து- பந்தமும் நேசமும் பாசமும் மறந்து பதினாலு லோகமும் தனையும் மறந்து-
இந்திரியர்கள் இரட்சித்த கப்பலிலேறி- ஏகாந்தமான தொரு கடலிலே தள்ளி அந்திரமான வெளி அருளானந்த வெள்ளத்தில்- அழுந்து தையோ கப்பல் ஏலேலோ ஏலேலோ. |