சர்ச்சிலுக்கு! ....
சர்ச்சில் எனும்கிழ வா-ஒரு
சங்கதி
சொல்லுகிறேன்
கர்வம் விடுத்திடுவாய் - சற்றே
காதுகொடுத்தி டுவாய்!
பாபம் புரிந்தவனே - கொடும்
பாதகம் செய்பவனே
தீபம் அணையுதுபார் - உன்றன்
செல்வ அரண்மனையில்!
காலம் முடிந்ததென்றே - தன்
கையில் கணக்குடனே
காலனும் வந்துவிட்டான் - உன்
கள்ளக் கணக்கையெடு!
உன்னுடை மாளிகையில் - பேயும்
ஒப்பாரி வைக்குதடா!
கன்னங்கரிய இருள் - உன்றன்
கண்களைத் தேடுதடா!
காலக் கடைசியடா - இது
காலத் திறுதியடா!
ஞாலம் விடைகொடுக்கும் - உன்னை
நானும் அனுப்பிவைப்பேன்!
செத்துவிட்டால்
உனக்கே - ஒரு
சீட்டுக் கவியெழுதி‘
மெத்த வணக்கம்’ என்றே - எமன்
வீட்டுக் கனுப்பிடுவேன்!
போய்விடு, போய்விடு, நீ - கொலை
போர்த் தொழில்
கொண்டவனே!
போய்விடு போய்விடு நீ - மக்கள்
‘போ’வெனச் சொல்லுகிறார்!
|