சட்டை போட்ட குரங்கு
பண்டி கைக்கு வாங்கிய
பால னுடைய சட்டையை
கொண்டு சென்று விட்டது,
குரங்கு ஒன்று திருடியே!
அருமை யான சட்டையை
அணிந்து மனிதர் போலவே
குரங்கு காட்டை நோக்கியே
"குடுகு" டென்று சென்றது.
ஓடிச் சென்று காட்டிலே
உள்ள நண்பர் முன்னரே
ஆடிப் பாடிக் குதித்தது;
அவைகள் கேட்க உரைத்தது:
“மனிதன் போல உடையுடன்
வந்தேன்; என்னைப் பாருங்கள்.
இனிமேல் என்னைக் குரங்கென
எவரும் கூற முடியுமோ?”
|