குழந்தைகள் நூல் நிலையம்
எங்களூர் மத்தியிலே - நல்ல
எழில்மிகு சோலையுண்டு.
அங்கொரு கட்டடமாம் - அதன்
அழகினை என்னசொல்வேன்?
சிறுவர் படிப்பதுபோல் - முன்னால்
சிலைகள் இரண்டிருக்கும்.
"வருக, வணக்கம்" என்றே - அங்கே
மற்றோர் சிலை அழைக்கும்.
குழந்தைகள் நூல்நிலையம் - என்று
கொட்டை எழுத்தினிலே
அழகுடன் ஓர்பலகை - நம்
ஆசையைத் தூண்டிவிடும்.
உள்ளே புகுந்ததுமே - காண்போர்
உள்ளம் குளிர்ந்திடுமே.
பிள்ளைகள் அவ்விடத்தை - விட்டுப்
பிரியவும் சம்மதியார்.
|