கட்டட மத்தியிலே - தூய
கலைமகள் வீற்றிருப்பாள்.
சுற்றுச் சுவரிலெல்லாம் - பல
சுந்தர ஓவியங்கள்!
பஞ்ச தந்திரத்தில் - உள்ளே
பற்பல கதைகளுக்கே
நெஞ்சைக் கவருகின்ற - பல
நிகரிலாச் சித்திரங்கள்!
உலகப் புகழுடைய - சில
உயர்ந்த கதைகளுக்கும்
பலப்பல வண்ணங்களில் - அங்கே
பளிச்சென ஓவியங்கள்!
சின்னஞ் சிறுவருக்கே - ஏற்ற
சிறுசிறு நாற்காலி
முன்னால் இருந்திடுமே - நல்ல
மேசைகள், புத்தகங்கள்!
ஆனையும், ஒட்டகமும் - நல்ல
அழகுக் குதிரைகளும்
மானும் மயிலும் உண்டு - யாவும்
மரத்திலே செய்தவைகயாம்!
|