பக்கம் எண் :

மலரும் உள்ளம்115

ஆனை முதுகினிலே - பல
   அற்புதப் புத்தகங்கள்.
ஆனையின் மீதேறி - ஒருவன்
   அமர்ந்து படித்திடுவான்.

இப்படி வாகனங்கள் - மேலே
   ஏறிப் பலசிறுவர்
அப்படி இப்படியும் - சற்றே
   ஆடிப் படித்திடுவார்.

அண்ணன் கதைபடிப்பான் - தம்பி
   ஆசையாய்க் கேட்டிடுவான்.
சின்னஞ் சிறுவரிலே - சிலர்
   சேர்ந்து படித்திடுவர்.

புல்லிலே ஓர்சிறுமி - சாய்ந்து
   புத்தகம் தான்படிப்பாள்.
கல்லிலே ஓர்சிறுவன் - அமர்ந்து
   கதைகள் படித்திடுவான்.

சிறுவர்க ளெல்லோரும் - உலகைத் 
   தெரிந்து கொள்வதற்கே
அறிவு நூல்களெல்லாம் - கதைபோல்
   ஆனந்தம் ஊட்டிடுமே!