பக்கம் எண் :

116மலரும் உள்ளம்

வண்ணப் படங்களுடன் - பல
   வகைவகைப் புத்தகங்கள்
கண்ணைக் கவர்ந்திடுமே - நன்கு
   களிப்பினில் ஆழ்த்திடுமே!

சிறுவர்க் குதவிடவே - என்றும்
   சிரித்த முகத்துடனே
அருமை தெரிந்தநல்ல - ஓர்
   "அக்கா"வும் அங்கிருப்பாள்!

விடுமுறை நாட்களிலே - சிறுவர்
   வீட்டை மறந்திடுவார்.
"குடுகுடு" என்றுவந்தே - ஒன்றாய்க்
   கூடிப் படித்திடுவார்.

பாட்டிக் கதைகளுடன் - இன்னும்
   பற்பல நற்கதைகள்
நாட்டமாய்க் கூறிடுவார் - ஒருவர்
   ஞாயிறு மாலையிலே.

எங்களூர் நூல்நிலையம் - போலே
   இன்பத் தமிழகத்தில்
எங்கும் அமைந்திடுமோ? - அந்நாள்
   என்றுதான் வந்திடுமோ!