இந்து - முஸ்லிம் சண்டையில்
இருவர் நலனும் கருதியே
சொந்த உயிரைக் கொடுக்கவும்
துணிந்த தவரின் அன்புதான்!
குண்டு தன்னை வீசியே
கொல்ல வந்தான் அவனையும்
மன்னித் தாரே - அதுவுமே
மகிமைக் காந்தி அன்புதான்!
ஃ ஃ ஃ
தோழர்க ளிடத்தும்
அன்பு!
தொண்டர்க ளிடத்தும் அன்பு!
ஏழைக ளிடத்தும் அன்பு!
எதிரிக ளிடத்தும் அன்பு!
கோழைக ளிடத்தும் அன்பு!
கொலைஞர்க ளிடத்தும் அன்பு!
வாழைபோல் உதவி அன்பை
வளர்த்தனர் காந்தி அண்ணல்!
|