பக்கம் எண் :

மலரும் உள்ளம்137

எலி -
     
    
    
    
பூனை -
    
    
    
    
எலி -
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
    
ஆசை காட்டி மோசம் செய்யும்
   அற்பப் பூனையே,
அசடு நானும் அல்ல, அல்ல.
   அறிந்து கொள்ளுவாய்.

அடடா. இதுபோல் நீயும் என்னை
   நினைக்க லாகுமோ?
அருமை யான பண்டந் தன்னை
   மறுக்க லாகுமோ?

இனிப்பை நானும் தின்ப தற்கோ
   வருந்தி அழைக்கிறாய்?
இல்லை. இல்லை. என்னைப் பிடித்துத்
   தின்னப் பார்க்கிறாய்.

உலகில் உள்ள பண்டம் யாவும்
   கிடைப்ப தாயினும்,
உயிரைக் கொடுக்க உலகில் எவரும்
   துணிந்து வருவரோ?

வளையை விட்டே உனது வயிற்றில்
   வந்து சேர்ந்திட
மடையனல்ல. வழியைப் பார்த்து
   நடையைக் கட்டுவாய்!