மன்னன் -
வேதாந்தி -
மன்னன் -
வேதாந்தி -
|
இன்னும் இந்த உலகிலே
இருக்கும் நாடு யாவையும்
வென்று நானும் மகிழுவேன்;
வெற்றி முழக்கம் செய்குவேன்.
அதற்கு அப்பால்...?
சொந்த நாடு திரும்புவேன்;
தோட்டம் ஒன்றின் நடுவிலே.
சின்ன வீடு கட்டுவேன்.
திருப்தி யாக வாழுவேன்.
சொந்த நாட்டில் சிறியதாய்த்
தோட்டம், வீடு அமைக்கவே
இந்த உலகம் முழுவதும்
ஏனோ வேண்டு மென்கிறாய்?
சின்ன சீடு கட்டியே
திருப்தி யோடு வாழவே,
இன்றே வேலை தொடங்குவாய்.
இன்பம் விரைவில் காணுவாய்! |