பக்கம் எண் :

மலரும் உள்ளம்177

சென்றன இரண்டு நாட்களுமே.
சீமான் நிலைமை அறிந்திடவே,

வெளியில் கிளம்பிச் சென்றனரே;
வீதிகள் எங்கும் சுற்றினரே;

ஒவ்வொரு கடையாய்ப் பார்த்தனரே.
ஒன்றிலும் இல்லை அவர்படமே!

எல்லாக் கடையிலும் தேடினரே.
எங்கும் மேற்படி மேற்படியே!

எப்படிப் போயின படங்களெலாம்?
என்றே அவரும் எண்ணுகையில்,

அருகில் ஓர்கடை முதலாளி,
அவரது நண்பர் ஒருவரிடம்

கூறிய வார்த்தைகள் அவர்காதில்
கூரிய வேல்போல் பாய்ந்தனவே:

“ஊர்பெயர் தெரியா ஒருவனது
உருவப் படத்தை ஒருமடையன்

கண்ணா டியுடன் என்னிடத்தே 
கடையில் மாட்டத் தந்திருந்தான்.