பக்கம் எண் :

மலரும் உள்ளம்201

இருபது பேர்கள்

இருபது பேரைக் கத்தியினால் 
   இரக்கம் இன்றி வெட்டினேன்நான்.
ஒருவரும் செத்துப் போகவில்லை.
   ஒருதுளி ரத்தமும் சிந்தவில்லை.

"குய்யோ, முறையோ" என்றவர்கள்
   கூக்குரல் கூடப் போடவில்லை.
பொய்யே இல்லை; சொன்னதெலாம்
   மெய்தான், மெய்தான் மெய்யேதான்.

பத்துப் பேர்கள் கைகளிலே;
பத்துப் பேர்கள் கால்களிலே;
மொத்தம் இருபது பேர்களடா!
வெட்டப் பட்டவை நகங்களடா!