பக்கம் எண் :

204மலரும் உள்ளம்

தாபத்துக்குத் தண்ணீர் தாரான்.
ஆபத்துக்கும் உதவான்; கொள்ளை
லாபத்துக்குப் பொருளை விற்பான்
பாபத்துக்கே ஆளாவானே!

என்று பாட வந்துவிடுகிறது. பூ, இவ்வளவுதானே!

தொப்பென்று வீழ்ந்தான்!

தெருவில் நடந்து சென்றான்
சின்னச் சாமி என்பான்.

வாழைப் பழத்தைத் தின்றான்;
வழியில் தோலை எறிந்தான்;

மேலும் நடந்து சென்றான்;
விரைந்து திரும்பி வந்தான்;

தோலில் காலை வைத்தான்.
தொப்பென் றங்கே வீழ்ந்தான்!