பக்கம் எண் :

86மலரும் உள்ளம்

மனத்தில் நாங்கள் நினைப்பதெல்லாம்
   வாயை விட்டுச் சொல்லிடுவான்;
பணத்தைக் கீழே புதைத்துவிட்டுப்
   பையன் கையில் வரவழைப்பான்!
                            (வித்தைக்காரன்)

தரையிலுள்ள மண்ணை அள்ளிச் 
   சர்க்க ரையாய்த் தந்திடுவான்;
மறைந்து போன மோதிரத்தை
   வாழைப் பழத்தில் வரவழைப்பான்!
                           (வித்தைக்காரன்)

மாய வித்தை செய்திடுவான்;
   மந்திர வித்தை செய்திடுவான்;
ஆயி ரம்பேர் வாய்பிளந்தே
   "ஆஹா!" என்று கூறவைப்பான்!
                           (வித்தைக்காரன்)