குளிர்முகில்
இழுத்திடும் குறுக்குக் கோடுகள்
வானவில் ஆகும். அந்த வானவில்,
நீர்முகில் அமைத்த நிறங்களின் நெருக்கம்!
அந்த நெருக்கம் அழகின் விளக்கம்!
கொடுமை செய்து கொல்லாத வில்லது.
சேரனும் சோழனும் தென்திசை வேந்தனும்
வல்வில் ஓரியும் வரலாற்று வீரரும்
ஏந்திய வில்லோ, எதிர்த்தோர் உயிரைக்
குடித்து முடித்தவில்! கொடிய கொலைவில்!