பாரத
நாடு
நாட்டு வணக்கம்
சுதேச வந்தனம்
|
ராகம்-காம்போதி [தாளம்
-- ஆதி]
|
எந்தையும் தாயும் மகிழ்ந்து
குலாவி
இருந்ததும் இந்நாடே -- அதன்
முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே -- அவர்
சிந்தையி லாயிர மெண்ணம் வளர்ந்து
சிறந்தது மிந்நாடே -- இதை
வந்தனை கூறி மனத்தில் இருத்திஎன்
வாயுற வாழ்த்தேனோ -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
|
1
|
இன்னுயிர்
தந்தெமை ஈன்று வளர்த்து அருள்
ஈந்ததும் இந்நாடே -- எங்கள்
அன்னையர் தோன்றி மழலைகள் கூறி
அறிந்ததும் இந்நாடே -- அவா
கன்னியராகி நிலவினி லாடிக்
களித்ததும் இந்நாடே -- தங்கள்
பொன்னுடல் இன்புற நீர்விளை யாடிஇல்
போந்ததும் இந்நாடே -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
|
2.
|
மங்கைய ராயவர் இல்லறம்
நன்கு
வளர்த்ததும் இந்நாடே -- அவர்
தங்க மதலைகள் தூன்றமுள் ஈட்டித்
தழுவிய திந்நாடே -- மக்கள்
துங்கம் உயர்ந்து வளர்கெனக் கோயில்கள்
சூழ்ந்ததும் இந்நாடே -- பின்னர்
அங்கவர் மாய அவருடற் பூந்துகள்
ஆர்ந்ததும் இந்நாடே -- இதை
வந்தே மாதரம், வந்தே மாதரம்
என்று வணங்கேனோ?
|
3
|