{ வேலன், நீலனுடைய சூழ்ச்சியைக்
கூறினான். }
என்னிடத்தில் பேழையினைப் பறிக்க நீலன்
எழிலுடைய நீலியிடம் உளவறிந்தான்,
இன்னல்செய எவ்விடத்தும் ஆட்கள் வைத்தான்.
இதற்கிடையில் நீஇறந்தாய் என்ற பொய்யை
என்செவியில் நீலியினால் எட்ட வைத்தான்,
இவையெல்லாம் இருக்கட்டும், பெண்இதழ்தான்
கன்னலின்சா றென்கின்றார் மெய்யா என்றான்
காணிர்என, உளங்கனிந்தாள்! நடக்கலுற்றாள்!
நானில்லை எனத்தெரிந்தால் நீரு மில்லை,
நடுத்தெருவில் பேழைதான் கிடக்கும்! நீலன்
தானிந்த நாட்டினையும்,எனையும் பெற்றுத்
தனியாட்சி நடத்தலாம் எனநினைத்தான்!
தேனில்லை எனில்நல்ல வண்டுமில்லை
செத்தொழிவேன் நீர்இறந்தால்! இதனை நீலன்
ஏனறிய வில்லை? இருக்கட்டும்!தென்றல்
இருவருக்கும் நடுச்செல்ல விடாதீர் என்றாள்.
|
( 5 )
( 10 )
( 15 ) |