திம்மன்பெண்டாட்டிஎங்கே என்றான்
மன்னன்!
தெரியவில்லை என்றார்கள்
சிப்பாய் மார்கள்!
திம்மனெங்கே எனக்கேட்டான் பின்னும் மன்னன்
நான்தான் என்றெதிர்வந்தான்
தமிழத் திம்மன்
திம்மன்எனல் நீதானா? யார்கொ டுத்தார்
சிப்பாய்வேலையுனக்குச்
செப்பாய் என்றான்.
திம்மன'்இவரே' என்றான் பிணத்தைக் காட்டி!
தேசிங்கும் சுதரிசனின்
சூழ்ச்சி கண்டான்
பொய்யுடையச் சுதரிசன்சிங்க், திம்மனுக்குப்
போட்டஒரு குற்றத்தை
அறிந்த மன்னன்
மெய்பதைத்தல் இல்லாமல் திம்மா இந்த
மிகக்கொடிய செயல்செய்தோன்
யாவன் என்றான்.
செய்யாத குற்றத்தைச் செய்திருப்பான்,
செத்திருப்பான்.
நள்ளிரவிற் செஞ்சி வந்தேன்
வெய்யில்வரா முன்னமே சிங்கன் என்னை
வீட்டிலிருநது் இவ்விடத்தில்
அழைத்து வந்தான்.
இதுவரைக்கும் வெளிச்செல்ல வில்லை என்றான்.
உன்மனைவி எங்கென்றான்
தேசிங்க் மன்னன்
அதுஎனக்குத் தெரியாதே என்றான் திம்மன்!
அவனுக்கு வேறுதுணை
உண்டோ என்றான்.
புதியஊர், துணையில்லை என்றான் திம்மன்.
பொய்ஒன்றும் கூறாதே
என்றான் மன்னன்!
பதறியே பொய்யல்ல என்றான் திம்மன்!
பழஊராய் இருந்திட்டால்
பத்தினிக்கே
பலதுணைவர் இருப்பாரோ என்றான் மன்னன்.
பலஉறவோர் துணையிருப்பார்
என்றான் திம்மன்.
தலையுருண்டு போகுமடா திம்மா அந்தத்
தமிழச்சி இருப்பிடத்தைககாட்ட வேண்டும்!
* நிலையறியாத் திம்மனைநீர் இழுத்துச் செல்வீர்
நெடுவீதி தொறுந்தேடச்
செய்வீர் இன்னோன்
கொலைக்கொத்த தோழரையும் அஞ்சா நெஞ்சக்
கூத்தியையும் பிடிப்பீர்என்றுரைத்தான் மன்னன்.
அமுதொத்த பெண்ணாளைக் கற்பின் வைப்பை
அயலானின் கூத்திஎன்று
சொல்லி விட்டீர்
தமிழச்சி கத்திஐயா அந்தக் கத்தி!
தடமார்பில் நுழைத்தகத்தி
நுழைத்த வண்ணம்
அமைந்துவிட்டுப் போயினாள். அவளின் பேரை
அதுசொல்ல வேண்டுமென
நினைத்தாள் போலும்
தமைக்கெடுக்க வந்தவனைக் கொல்லும் பெண்கள்
தண்டிக்கப் படவேண்டும்
என்று சொன்னால்,
நான்தேடி அழைந்துவர அட்டிஇல்லை.
நடுமார்பில் நிற்கின்ற
கத்தி யே!உன்
தேன்போன்ற சொல்லாளைத் தலைவி தன்னைத்
தெரிவிப்பாய்,
எங்குள்ளாள்? செங்குத் தாக
வான்பார்த்து நிற்கின்றாய் சிங்கன் மார்பில்.
வானத்தில் அவளாவி
அளாவிச் செல்லத்
தான்மறைந்து போனாளா வாழ்கின்றாளா?
சாற்றுவாய் எனத்திம்மன்
வாய்பதைத்தான்.
அங்கிருந்த சிப்பாய்கள் இருவர், திம்மன்
இருகையைப் பின்கட்டி
அழைத்துச் சென்றார்
குரலொலியும் உள்அழுந்த நடந்தான் திம்மன்!
கூர்வாளை உயர்த்திநடந்தார்சிப்பாய்கள்.
பெரிதுயர்ந்த குன்றத்தின் சாரல் தன்னில்
பெண்ணாளும், செங்கானும்
ஓர்ஆலின்கீழ்
தெரியாமல் நின்றிருந்தார்! திம்மன் மற்றும்,
சிப்பாய்கள் வரும்நிலையைத்
தெரிந்து கொண்டார்
* இது அங்கிருந்த சிப்பாய்களை நோக்கிச்
சொல்லுவது.
|
( 260 )
( 265 )
( 270 )
( 275 )
( 280 )
( 285 )
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
|