பக்கம் எண் :

குறிஞ்சித் திட்டு

பிரிவு -- 56


(விநோதையின் உள்ளம்.)


விநோதை. செழியன்! தனியறை, பஞ்சணை,
கனிபால், பண்ணியம் கமழும் கலவை!
அழகிய காட்சி! அழகிய காட்சி!
செழியனின்அழகிய திருமேனி தொட்டு
நலம்செய்தாள்;பின் நறுங்கனி பிளந்து
வாயினில் ஊட்டினாள். மகிழ்ச்சியால் உண்ட
செழியன் விழிகள் சுழன்றன! தூக்கம்
மழையில் புல்லென வளர்ந்தது. படுத்தான்.

விநோதை அயலில் விரைந்து செல்கையில்,
வழியிலோர் வளைவில் சில்லி கிடப்பதைக்
கண்டாள். கண்களைக் கசக்கிச், "சில்லியா!"
என்று பார்த்தாள். "தூக்கமா?" என்றாள்.
விழித்தான் சில்லி. விநோதைஎன்றறிந்து,
விழித்த விழியை விரைவில் மூடித்
தூங்குவான் போல இருந்தான்! தோகை
தூங்கினான் என்று போகத் தொடங்கினாள்.
மெல்லி அரசனை அடைந்தாள். இங்கே
சில்லி பஞ்சணை அறையைத் திறந்தான்.
செழியன் தூக்கம் சேயிழை செயலென
உணர்ந்தான். ஓடினான். வெளியில்! மருந்து
கொணர்ந்தான். மூக்கில் இணைய வைத்தான்.

செழியன் எழுமுன் சில்லி மறைந்து,
நடப்பது காண மறைவை நாடினான்.
விழித்த செழியன், "விநோதையே! என்றான்.
வீடெலாம் தேட விரைந்து செல்கையில்,
வளைவில் சில்லியைக் கண்டொன்று வைத்தான்.
"கேளுங்கள், கேட்டபின் அடியுங்கள என்ற
சில்லியை நோக்கி செழியன், "சொல எனச்
சில்லி சொல்கின்றான்; 'விநோதை மன்னவன்
அரண்மனை நோக்கி, அதோசெல்கின்றாள்
தற்செயலாகத் தங்கள் அறைக்குள்
புகுந்தேன். துயிலில் புதைந்து கிடந்தீர்.
மூச்சில் மருந்து பாய்ச்சி எழுப்பினேன்.
இங்கே வந்தேன். மறைவினி லிருந்தேன்,
விநோதை சென்றதைப் பார்த்தேன், விநோதை
தனியே அரண்மனை சார்ந்ததும் கண்டேன
என்று சொன்னான். செழியன்.
"நன்றெ"ன நடந்தான். அரண்மனை நோக்கியே!






( 5 )





( 10 )




( 15 )




( 20 )





( 25 )




( 30 )




( 35 )

பிரிவு -- 57

(விநோதையின் கோள்.)

(அறுசீர் விருத்தம்)

மன்னவன் தனைவி நோதை
மார்புறத் தழுவி, "என்றன்
அன்பே! என் உயிர்ம ருந்தே!
அங்கந்தச் செழிய னைநான்
முன்மணம் முடிக்க வேண்டும்
என்பதால் முடித்தேன். அந்தப்
புன்மைசேர் செழியன் என்னைப்
புணர்வது கருதி வந்தான்.

"மன்னவன் அன்றி வேறோர்
மகனைநான் தொடுதல் இல்லை!"
என்றேன்நான். அதன்பின் அன்றோ
இணங்கினான் ஒப்புக் கொண்டான்
என்றனள். மகிழ்ந்து மன்னன்,
"நல்லிருள் போதில் வந்தாய்,
கன்னலே நன்றி! என்றன்
காதல்நோய் தீர்ப்பாய்!" என்றான்.

இவ்வாறு பேசி அன்பில்
இணைந்தனர் மறைந்து நின்று
செவ்விதின் இவற்றைக் கேட்ட
செழியனும் வீடு வந்து,
'பொய்வாழ்க்கை விநோதையாள்ஓர்
பொதுமகள் என்ற செய்தி்
எவ்வாற்றானும் பொருந்தும
என்றெண்ணி எண்ணி நைந்தான்.

"பஞ்சணை நலம்புரிந்தாள்,
பழம்தந்தாள்; எனை மறந்தேன்
வஞ்சனை புரிந்தாள் அந்த
மன்னனை அடைந்தாள் அங்குக்
கொஞ்சினாள்; பொய்புகன்றாள்.
புகழ்ந்தனள்! எனைஇகழ்ந்தாள்!
நெஞ்சுதீ! ஆனால், அன்னாள்
முகம்மட்டும் நிலவே அன்றோ?

"திருமணம் புரிந்தும், என்னைத்
தீண்டவே இல்லை யாம்! நான்
மருவிட அழைத்தபோது,
;மன்னனை அன்றி மண்ணில்
ஒருவனைத் தொடவும் மாட்டேன்'
என்றாளாம்! என்ன பொய்கள்!
இருளவள் நெஞ்சம்! ஆனால்,
இதழ்மட்டும் அமிழ்தின் ஊற்றே!

"அயலவர் குறிஞ்சி நாட்டை
அடைந்திட எண்ணி, இந்தக்
கயல்விழியாளை இங்கே
கடத்திஆழம்பார்க் கின்றார்!
முயல்கின்றாள், இந்த நாட்டின்
முறுக்கினை உடைப்பதற்கே;
புயலவள் நெஞ்சம்! ஆனால்,
பொன்னவள் இன்ப மேனி!

"அரசியைச் சாகச் செய்தாள்;
அவள்மகன், திண்ணன் ஆன
இருவீரர் தம்மைக் கொன்றாள்.
என்நண்பன் சேந்தன் தன்நேர்
பெரும்பகை எனநினைத்துப்
பிரித்தனள் ஆவி தன்னை!
இரக்கமே அறியாள்! ஆனால்,
இரண்டுகண் இரண்டு கெண்டை!"

தேம்பிடும், மறுகணத்தில்
சிரித்திடும் பிள்ளை போல --
வேம்பென்பான் விநோதை தன்னைக்
கரும்பென்பான் மறுகணத்தில்;
பாம்பென்பான்; மறுகணத்தில்;
பன்மலர் மாலை என்பான்!
பூம்பொழில் தவிர்வான்; பாலை
புகல்ஆவான் செழியன் ஆங்கே!





( 40 )




( 45 )





( 50 )




( 55 )




( 60 )





( 65 )




( 70 )





( 75 )









( 85 )





( 90 )





( 95 )




( 100 )

பிரிவு -- 58

(தாமரையும் சில்லியும் பேசுகின்றனர்.)

(அகவல்)

"தாமரை கேட்பாய், தாமரை கேட்பாய்!
காம விநோதை செழியனைக் கடிமணம்
புரிந்தான். அவனொடு கலவி புரிந்தாள்
அங்ஙனே அந்த இரவே செழியனை
மருந்தால் மயக்கி, அரசனை அணுகினாள்.

"அழகின் அரசே! செழியனை நான்
மணந்ததன்றி மருவினேன் இல்லை'
என்று கூறி, இன்பந் தந்தாள்
அப்படி விநோதை இயம்பு வதனைச்
செழியன் தெரிந்து கொண்டான்; எனினும்
அவளின் அழகை விடமனமின்றி
அதோநிற்கின்றான் பதைத்தல் இன்றி;
புலனை வென்றவன் வீரன்; நலனுற்று
நம்பிய நாட்டை நட்டாற்று விட்டு
மறுபுலப் பொதுமகள் மலரடி வீழ்வது
பேடிமை அன்றோ? பேடிமை அன்றோ''
என்று கூறினான் சில்லி.
'நன்றெ'னத் தாமரை சென்றாள் ஆங்கே!







( 105 )





( 110 )




( 115 )




( 120 )

பிரிவு -- 59

(விநோதை நடுக்கம்)

(அகவல்)

உறக்கம் ஒருபுறம் இழுக்க, விழிப்பு
மறுபுறம் இழுக்க மன்னன் கட்டிலில்
புழுவென நெளியும் போதில் அன்னவன்
விழிமேல் கனப்பொருள் ஒன்று விழுந்தது.
கையால் எடுத்தான். கடிது பிரித்தான்
அஞ்சலை அவாவுடன் படிந்தான்: "விநோதையே!
விநோதையே!" என்று விளித்தான்! விநோதை
கனவில் மன்னன் கழறிய தென்று
நின்றவள் நின்றபடி நின்றாள்! பின்னும்
'ஏமாற்றுக் காரி எங்கே சென்றாய்?
செழியனோ உனக்குத் தேவை? அழிவினாய்!"
என்று கூறினான். ஏந்திழை நடுங்கினாள்.
அடியெடுத்து வைக்க அவளால் முடிகிலை.
அங்குச் செழியனால் அழிவைப் பெறுவதா?
இங்கு மன்னனால் இறப்பைப் பெறுவதா?
இப்புறம் அப்புறம் இருவிழி செலுத்திச்
செப்புப் படிவம் தன்னை
ஒப்ப நின்றாள், ஒழுக்கமிலாளே!









( 125 )




( 130 )




( 135 )

பிரிவு -- 60

(சிவன் பெயரைச் சொல்லி விநோதை மன்னனை ஏமாற்றுதல்)

மன்னனைக் கண்ணெதிர் கண்டாள் மங்கை;
"மன்னரே என்னிடம் சிவனார் வந்தார்;
எழுப்பினார்; எழுந்தேன்; இட்டு வந்தார்,
விழிப்புறு செய்திகள் பலப்பல விளம்பினார்.
'அருட்படி ஆகுக' என்றேன். அப்பர்
உருமறைந்தார். உள்ளம் கனிந்து
தொழுதுநிற்கின்றேன், தொடாதீர்!" என்றாள்
"அரசனைத் தொட்டே அணைத்த கையால்
செழியனைத் தொட்டது தீதே என்று
சிவனார் உனக்குச் செப்பினாரா?
அல்லது அவரும் உன்றன் வஞ்சம்
நல்லதே என்று நவின்று சென்றாரா?
என்று மன்னன் இயம்பிய அளவில்,
விநோதை தரையில் விழுந்து புரண்டு,
"என்றன் கற்புக்கிழுக்குப் பேச
ஒப்பிற்றேயோ உங்கள் மலர்வாய்?
தீண்டா நெருப்பைத் தீண்டுவார் யாவர்?
இப்பழி சுமந்துநான் இனியும் வாழ்வதோ?

அம்மையே அப்பா ஒப்பிலா மணியே!
என்னைக் காப்பது உன்றன் கடனே!"
பொய்ப்பழி போக்கல் உன்றன் கடனே!"
என்று கோவென அழுதெ ழுந்து்
அன்பரே! என்றன் அழகு மணவாளரே!
உம்மை அல்லால் ஒருவரை நினைக்கிலேன்.
இதனை நாளை எம்பெருமானின்
திருவாயாலே திருக்கோயிலிலே
செப்பும் வண்ணம் செய்திடு கின்றேன்
அப்போ தொப்புக!" என்றாள்
எப்போ தும்பொய் இயம்பும் விநோதையே!

(வேறு) (அறுசீர் விருத்தம்)

இதுகேட்ட திரைய மன்னன்
எண்ணத்துக் கடலில் ஆழ்ந்தான்.
"புதிதாக விநோதை சொல்லும்
புத்தேள்ஒன்றில்லை யானால்,
அதைஇவள் நம்புவாளா?
அச்சிவன் வாய்தி றந்தும்
எதிர்வந்தும் பேசு மென்றே
இயம்பவும் துணிகுவாளா?

"விநோதைதான் செழியன் தன்னை
விரும்புவ தில்லை என்று
தனிஎதிர் வந்து நின்று
சிவத்தெய்வம் சாற்று மென்றாள்.
அனையதும் நாளை என்றாள்
அதையும் நான் காண்பேன். அஃது
புனைசுருட்டாகு மாயின்,
பொய்க்காரி சாகத்தக்காள்."

என இவ்வாறெண்ணி மன்னன்
"ஏந்திழையாய், அப்படிச்செய்!
எனச்சொன்னான். விநோதை, "ஐயா!
இதோ நாளைக்கேஎண்பிப்பேன்.
இனிஅது வரைக்கும் உண்ணேன்,
இன்பத்தை உம்பால் கொள்ளேன்.
தனித்திருந் திடுவேன்!" என்று்
தமியளாய் ஒருபாற் சென்றாள்;




( 140 )




( 145 )




( 150 )




( 155 )





( 160 )





( 165 )






( 170 )




( 175 )





( 180 )





( 185 )




( 190 )