வேண்மாளும் குட்டுவனும் உரும றைத்தே
விரைந்துசெலும் அவ்வொருத்தி யைத்தொ டர்ந்தார்;
தூண்மாளும் வேலைஒரு புறத்தே! ஓவச்
சுவர்எழும்பும் மற்றொருபால்! கோயில் தன்னைக்
காண்பாரின் உளம்பறிப்ப தாம்மேற் கட்டுக்
கற்றச்சர் இன்கனவை உண்மை ஆக்கும்
வேண்மாளும் குட்டுவனும் அவற்றைத் தாண்டி
விள்ளரிதாம் ஒருவிடுதி உள்ளே சென்றார
கண்ணகிக்குக் கல்லுருவம் அமைப்பான் அங்கே
காலைபோம், நடுப்பகல்போம், மாலை யும்போம்,
எண்ணத்தை மீட்கவில்லை; கண்ணும் கையும்
எடுத்ததில்லை வேறுபுறம்! மனைவி யான
வண்ணமயில் எதிர்வந்தாள் பார்க்க வில்லை;
வாய்ப்பாட்டும் கேட்கவில்லை, ஆடலானாள்
உண்ணின்ற உயிரிருத்தும் உணர்வில்லாமல்
ஒழிந்ததுண்டோ எனமீண்டும் ஆடு கின்றாள்;
பண்ணடிக்கும் முழவடிக்கும் தக்க தாகப்
பச்சைமயில் ஆடிக்கொண் டேஇ ருக்க
விண்ணடிக்கும் மழைக்கசையாக் குன்றம் போல
விழிதிருப்பாக் கற்றச்சன் பணியே ஆனான்
கண்ணடித்தாள் பச்சைமயில் முகம்அ டித்துக்
கண்ணடித்துத்துக் கொண்டிருந்தான் கல்றச்சன்தான்
மண்ணடித்துப் போயிற்றோ காதல் என்றாள்;
மனமடித்துப் போயிற்றுக் கலைதான் என்றான்,
|
( 75 )
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
|