அவள் உலக அறவியில் உள்ளாள்
|
உலக அறவியினில் உள்ளாள்என் மூச்சு
விலக அறவிடேல் என்னை-இலகணையின்
மென்பஞ் சுமக்கமையும் வேளைஇது! மற்றிதுவே
இன்பம் சுமக்கும் இனிது. |
( 175 )
|
தமிழ்நாட்டின் அருமை பெருமை
|
நோயென்றால் ஓடுவதும் நோயின்றேல் ஒட்டுவதும்
நாயென்றால் பின்னோடும் நாய்ச்செயலே-தீயேம்யாம்
அன்புற் றிருந்தறம் செய்தோமே? ஈன்றாளா
இன்பத் தமிழ்த்தாய் எமை? |
( 85 )
|
கட்டழகா காண்பாய்என் விண்ணப்பம்! உன்னடியில்
இட்டழவே இங்குற்றேன் என்னெனில்-ஒட்டாரக்
காரிதனைக் கைக்கெள்க காற்றாய் பறக்குமுன்
தேரிதனைச் செய்க விரைந்து. |
( 170 )
|
உதயன் தேரேறி விரைவாய்ச்
சென்றான்
|
ஏற்பாரை நோக்கிக் கிழவி இடலானாள்
மேற்பாரை நீங்கமலை விட்டெழுந்தீப்-போற்பாரோர்
தங்கோமான் பிள்ளைபோய்த் தட்டிய தேர்ப்பரிகள்
தங்கோமான் என்பன; தாம். |
( 180 ) |
மணிமேகலையை உதயன் மறித்தான்
|
உலக அறவி உலவு நிலவை
விலக விடாது மறித்து-நிலமீது
செப்புக் குடம்படல் தெண்ணீர்க்கும் ஆம்காம
வெப்புக் குடம்படல் வேண்டு. |
|
இன்பம் துறப்பது கட்டாயமா?
|
ஏனித் துறவு மணிமே கலைஎன்தீர்
மானித்துறவு மறந்தாய்-நான்நீ
இறப்பதுகட் டாயம் இடைநடுவில் இன்பம்
துறப்பது கட்டாயமா சொல்? |
( 185 )
|
என்றுதையன் சொல்ல எதிர் வணங்கி ஐயாவே
ஒன்றுதையல் சொல்வேன் உளங்கொள்க-என்றும்
இடும்பை மலையென எள்ளென நேரும்
இடும்பைஇவ் யாக்கை அன்றோ? |
( 190 )
|
பொன்னெனப் பூவெனப் போரென நேரென
என்னென சொல்லினும் இன்னலின்-முன்வலைஎன்
றான்றோர் அணுகார் அவற்றால் துயரெய்தார்
சான்றோர்க; மும்மைத் தமிழ். |
( 195 )
|
'யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்'என்றே-ஓதினார்
வள்ளுவர்; அன்னாரின் வாய்மை யதனையோ
எள்ளுவர் எய்தார் நலம். |
( 200 ) |
ஈதுபுகன்ற மணிமே கலைஇனியும்
தீது செயக்கூடும் என்றுட்போய்-மாதான
காயசண்டி கைபோலக் காணுருமாற் றித்தெருவிற்
போயகன்றாள் கைக்கலமும் பூண்டு. |
|
இன்னுமவள் உள்ளே இருக்கின்றாள் என்றிருந்தான்
பின்னும் அவளைப் பெறாதகலேன்-என்றங்கே
நின்றிருந்தான் நெஞ்சை நிலைகேட்டான் வீடுபோய்
நன்றிருந்தான் நாட்டான் மகன். |
( 205 )
|
நிலையத்தில் நல்லுணவு வந்து நீட்ட
மலையத் தனையளவு மண்ட-அலைபோல்
வறியார்கள் வந்து வயிறார்ந்திட் டார்தேக்
கெறிவார்கள் எண்ணற் றவர் |
( 210 )
|
இடுகை மகிழ்ந்திடுவாள் ஏழைகள் தன்பால்
கடுகையில் தன்கை கடுக-மடமடென
அள்ளி இடுவாள்நல் லின்பம் அதிற்பறிப்பாள்
கள்ளி மணிமே கலை |
( 215 )
|
என் மாற்றுருவம் பயன்பட்டது என்றாள்
|
தான்கொண்ட காய சண்டிகையின் நல்லுருவம்
தான்கொண் டிருப்பதே நன்றென்பாள்-ஏன்றவர்கள்
தேன்கண்டு நெய்பால் தயிர்கொண்டு வந்தாலும்
தான்கண்டு வாங்குவாள் தாழ்ந்து. |
( 220 ) |
ஏந்துகை காணாத நேரம் கண் துயிலும்நேரம்
|
ஈந்தன எல்லாம் இனப்படுத்திச் சோறுகழி
வாய்ந்தன ஆக்கி வறியோரின்-ஏந்துகை
காணாத நேரமதன் கண்துயிலும் நேரமென்றாள்
வாணாள்வா ணாளாக்குகின்ற மான். |
|
தெருவில் கடையில் சிறுமுடக்கில் வீட்டின்
அருகில் முதியோர் அழிந்தார்-திரியுறுப்பர்
வாயூட்டி நெஞ்சம் மகிழ்வாள் தமையீன்ற
தாயூட்டி னாற்போலும் சார்ந்து. |
( 225 )
|
சிறைப்பட்டோரும் திருத்தப்பட்டார்
|
வேந்து சிறைக்கூடம் மேகலைதான் சென்றங்கே
ஈந்த முதலீகைக் கெட்டாநாள்-தேர்ந்த
கொலை கண்டார் தாமும் குறைகண் டுணர்ந்த
நிலைகண்டாள் நெஞ்சுவந்தாள். |
( 230 )
|
எல்லோரும் திருந்தினார்கள்
|
சோறும் மிகக்கொடுத்துச் சொற்பொழிவும் தானடத்தி
ஊறு பிறர்க்கொருவர் உன்னாத-வாறு
முறைகண்டாள் மூன்று தமிழ்கண்டாள், நாட்டில்
சிறைகண்டார் தீங்குகண்டார் யார்? |
( 235 )
|
நாட்டு நிலையறிந்து தொண்டு நலமறிந்து
காட்டுக் குயிலைக் கடிதழைத்துச்-சூட்டும்
முடியரசும் ஆட்சி முறைஎவ்வா றென்றான்
குடியரசும் சொன்னாள் குறை. |
( 240 ) |
முறையிருக்கும் போது சிறைஎதற்கு வேந்தே?
குறையிருக்க ஆட்சிசெயல் குற்றம்-இறைகேட்க;
மாணவரின் வாய்க்குத் தமிழும், மனத்துக்கச்
சாணி அறிவும் உயிர். |
|
|
|
|