தாமரை பூத்த குளத்தினிலே -- முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! -- அந்தக்
கோமளவல்லியைக் கண்டு விட்டான் -- குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! -- அவள்
தூய்மை படைத்த உடம்பினையும் -- பசுந்
தோகை நிகர்த்த நடையினையும் -- கண்டு
காமனைக் கொல்லும் நினைப்புடனே -- குப்பன்
காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.
முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் -- ஒரு
முழுமதி போல, நனைத்திருக்கும் -- தன்
துகிலினைப்பற்றித் துறைக்கு வந்தாள்! -- குப்பன்
சோர்ந்துவிட்டா னந்தக் காம னம்பால்! -- நாம்
புகழ்வதுண்டோ குப்பன் உள்ளநிலை! -- துகில்
பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் -- குப்பன்
'சகலமும் நீயடி மாதரசி -- என்.
சாக்காட்டை நீக்கிடவேண்டும்' என்றான்.
கன்னி யனுப்பும் புதுப்பார்வை -- அவன்
கட்டுடல் மீதிலும் தோளினும் -- சென்று
மின்னலின் மீண்டது! கட்டழகன் -- தந்த
விண்ணப்பம் ஒப்பினள் -- புன்னகையால்
சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் -- அவள்
சங்கீத வாய்மொழி ஒன்றினிலே -- எண்ணம்
முற்றும் அறிந்திடக் கூடுமென்றே -- அவள்
முன்பு நடந்திடப் பின் தொடர்ந்தான் -- பின்பு
சிற்றிடை வாய்திறந்தாள் அதுதான் -- இன்பத்
தேனின் பெருக்கன்று; செந்தமிழே?
'சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் -- என்
தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.
|
( 5 )
( 10 )
( 15 )
( 20 )
( 25 )
|
காலை
மலர்ந்தது! மாந்தரெலாம் -- தங்கள்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! -- இச்
சோலையி லேஇளமா மரங்கள் -- அடர்
தோப்பினை நோக்கி வருக!' என்றாள்.
நாலடி சென்றனர்! மாமரத்தின் -- கிளை
நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் -- அந்த
மொய்குழல் 'யாதுன்றன் எண்ண' மென்றாள்.
'உன்னை எனக்குக் கொடுத்துவிடு! -- நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை' -- இந்தக
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் -- எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்;
'சின்ன வயதினில் என்றனையோர் -- பெருஞ்
சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! -- எனில்
அன்னது நான் செய்த குற்றமன்று! -- நான்
அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!
'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' -- என்று வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன்! -- தன்னை
இணங்கென்று சொன்னது -- காதலுள்ளம் -- 'தள்'
என்றனமூட வழக்க மெலாம் -- தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே -- குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! -- பின்
கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே -- சில
கண்ணற்ற மூட உறவினரும் |
( 30 )
( 35 )
( 40 )
( 45 )
( 50 ) |
வீதியிற்
பற்பல வீணர்களும் வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் -- வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் -- உன்
தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! -- நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! -- தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! -- நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து -- மணம்
கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!
கூடிய மட்டிலும் யோசித்தனன் -- குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! -- முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் -- அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் -- ஆ!
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! -- மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! -- மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் -- இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!
காதல் அடைதல் உயிரியற்கை! -- அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? -- அடி
சாதல் அடைவதும் காதலிலே -- ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! -- இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! -- கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! -- அடி
கோதை தொடங்கடி! என்று சொன்னான் -- இன்பம்
கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!
|
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 ) |