பக்கம் எண் :

காதல்

மாந்தோப்பில் மணம்

தாமரை பூத்த குளத்தினிலே -- முகத்
தாமரை தோன்ற முழுகிடுவாள்! -- அந்தக்
கோமளவல்லியைக் கண்டு விட்டான் -- குப்பன்
கொள்ளை கொடுத்தனன் உள்ளத்தினை! -- அவள்
தூய்மை படைத்த உடம்பினையும் -- பசுந்
தோகை நிகர்த்த நடையினையும் -- கண்டு
காமனைக் கொல்லும் நினைப்புடனே -- குப்பன்
காத்திருந்தான் அந்தத் தோப்பினிலே.

முகிலைக் கிழித்து வெளிக்கிளம்பும் -- ஒரு
முழுமதி போல, நனைத்திருக்கும் -- தன்
துகிலினைப்பற்றித் துறைக்கு வந்தாள்! -- குப்பன்
சோர்ந்துவிட்டா னந்தக் காம னம்பால்! -- நாம்
புகழ்வதுண்டோ குப்பன் உள்ளநிலை! -- துகில்
பூண்டு நடந்திட்ட கன்னியெதிர்க் -- குப்பன்
'சகலமும் நீயடி மாதரசி -- என்.
சாக்காட்டை நீக்கிடவேண்டும்' என்றான்.

கன்னி யனுப்பும் புதுப்பார்வை -- அவன்
கட்டுடல் மீதிலும் தோளினும் -- சென்று
மின்னலின் மீண்டது! கட்டழகன் -- தந்த
விண்ணப்பம் ஒப்பினள் -- புன்னகையால்

சற்றுத் தலைகுனிந் தேநடப்பாள் -- அவள்
சங்கீத வாய்மொழி ஒன்றினிலே -- எண்ணம்
முற்றும் அறிந்திடக் கூடுமென்றே -- அவள்
முன்பு நடந்திடப் பின் தொடர்ந்தான் -- பின்பு
சிற்றிடை வாய்திறந்தாள் அதுதான் -- இன்பத்
தேனின் பெருக்கன்று; செந்தமிழே?
'சுற்றத்தார் மற்றவர் பார்த்திடுவார் -- என்
தோழிகள் இப்பக்கம் வந்திடுவார்.





( 5 )





( 10 )




( 15 )





( 20 )





( 25 )


காலை மலர்ந்தது! மாந்தரெலாம் -- தங்கள்
கண்மலர்ந் தேநட மாடுகின்றார்! -- இச்
சோலையி லேஇளமா மரங்கள் -- அடர்
தோப்பினை நோக்கி வருக!' என்றாள்.

நாலடி சென்றனர்! மாமரத்தின் -- கிளை
நாற்புறம் சூழ்ந்திட்ட நல்விடுதி!
மூலக் கருத்துத் தெரிந்திருந்தும் -- அந்த
மொய்குழல் 'யாதுன்றன் எண்ண' மென்றாள்.

'உன்னை எனக்குக் கொடுத்துவிடு! -- நான்
உனக்கெனைத் தந்திட அட்டியில்லை' -- இந்தக
கன்னல் மொழிக்குக் கனிமொழியாள் -- எட்டிக்
காய்மொழி யாற்பதில் கூறுகின்றாள்;
'சின்ன வயதினில் என்றனையோர் -- பெருஞ்
சீமான் மணந்தனன் செத்துவிட்டான்! -- எனில்
அன்னது நான் செய்த குற்றமன்று! -- நான்
அமங்கலை' என்றுகண் ணீர்சொரிந்தாள்!

'மணந்திட நெஞ்சில் வலிவுளதோ?' -- என்று
வார்த்தை சொன்னாள்; குப்பன் யோசித்தனன்! -- தன்னை
இணங்கென்று சொன்னது -- காதலுள்ளம் -- 'தள்'
என்றனமூட வழக்க மெலாம் -- தலை
வணங்கிய வண்ணம் தரையினிலே -- குப்பன்
மாவிலை மெத்தையில் சாய்ந்துவிட்டான்! -- பின்
கணம்ஒன்றிலே குப்பன் நெஞ்சினிலே -- சில
கண்ணற்ற மூட உறவினரும்

( 30 )





( 35 )





( 40 )





( 45 )




( 50 )
வீதியிற் பற்பல வீணர்களும் வேறு
விதியற்ற சிற்சில பண்டிதரும் -- வந்து
சாதியி லுன்னை விலக்கிடுவோம் -- உன்
தந்தையின் சொத்தையும் நீ இழப்பாய்! -- நம்
ஆதி வழக்கத்தை மீறுகின்றாய்! -- தாலி
அறுத்தவளை மணம் ஒப்புகின்றாய்! -- நல்ல
கோதை யொருத்தியை யாம்பார்த்து -- மணம்
கூட்டிவைப்போம் என்று சத்தமிட்டார்!

கூடிய மட்டிலும் யோசித்தனன் -- குப்பன்
குள்ளச் சமூகத்தின் கட்டுக்களை! -- முன்
வாடிக் குனிந்த தலைநிமிர்ந்தான் -- அந்த
வஞ்சியைப் பார்த்தனன் மீண்டும் அவன் -- ஆ!
ஏடி வடிவத்தின் ஆதிக்கமே! -- மூடர்
எதிர்ப்பில் வெளிப்படும் நமதுசக்தி! -- மற்றும்
பேடி வழக்கங்கள், மூடத்தனம் -- இந்தப்
பீடைகளே இங்குச் சாத்திரங்கள்!

காதல் அடைதல் உயிரியற்கை! -- அது
கட்டில் அகப்படும் தன்மையதோ? -- அடி
சாதல் அடைவதும் காதலிலே -- ஒரு
தடங்கல் அடைவதும் ஒன்றுகண்டாய்! -- இனி
நீதடு மாற்றம் அகற்றிவிடு! -- கை
நீட்டடி! சத்தியம்! நான்மணப்பேன்! -- அடி
கோதை தொடங்கடி! என்று சொன்னான் -- இன்பம்
கொள்ளை! கொள்ளை!! கொள்ளை!!! மாந்தோப்பில்!


( 55 )




( 60 )





( 65 )





( 70 )




( 75 )
காதற் கடிதங்கள்

காதலி
ியின் கடிதம்


என் அன்பே,
இங்குள்ளார் எல்லோரும்
   க்ஷேமமாய் இருக்கின்றார்கள்;
என் தோழியர் க்ஷேமம்!
   வேலைக்காரர் க்ஷேமம்! இதுவுமன்றி
உன்தயவாம் எனக்காக உன்வீட்டுக்
   களஞ்சியநெல் மிகவுமுண்டே,
உயர் அணிகள் ஆடைவகை ஒவ்வொன்றில்
   பத்துவிதம் உண்டு. மற்றும்
கன்னலைப்போல் பழவகை பதார்த்தவகை
   பக்ஷணங்கள் மிகவுமுண்டு.
கடிமல்ர்ப்பூஞ் சோலையுண்டு. மான் க்ஷேமம்.
   மயில் க்ஷேமம். பசுக்கள் க்ஷேமம்.
இன்னபடி இவ்விடம்யா வரும்எவையும்
   க்ஷேமமென்றன் நிலையோ என்றால்,
'இருக்கின்றேன்; சாகவில்லை' என்றறிக.




( 80 )




( 85 )




( 90 )

இங்ஙனம் உன்
எட்டிக்காயே

காதலன் பதில்

செங்கரும்பே
உன்கடிதம் வரப்பெற்றேன்.
   நிலைமைதனைத் தெரிந்து கொண்டேன்.
தேமலர் மெய் வாடாதே! க்ஷேமமில்லை
   என்றுநீ தெரிவிக்கின்றாய்
இங்கென்ன வாழ்கிறதோ? இதயத்தில்
   உனைக்காண எழும்ஏக்கத்தால்,
இன்பாலும் சர்க்கரையும் நன்மணத்தால்
   பனிக்கட்டி இட்டுறைத்த
திங்கள் நிகர் குளிர்உணவைத் தின்றாலும்
   அதுவும் தீ! தீ! தீ! செந்தீ!
திரவியம் சம்பாதிக்க இங்குவந்தேன்.
   உனை அங்கே விட்டுவந்தேன்!
இங்குனைநான் எட்டிக்காய்
   என நினைத்ததா உரைத்தாய்; இதுவும் மெய்தான்.
இவ்வுலக இன்பமெலாம் கூட்டிஎடுத்
   துத்தெளிவித்து இறுத்துக்காய்ச்சி
எங்கும்போல் எடுத்துருட்டும் உருட்சியினை
   எட்டிக்காய் என்பாயாயின்
எனக்குநீ எட்டிக்காய் என்றுதான்
   சொல்லிடுவேன்.



( 95)




( 100)




( 105)





( 110)