Untitled Document 1698 | | மண்ணை ஒருநாள் ஒருகுயவன் மயக்கிப் பிசையும் வேளையிலே திண்ணை யருகு சென்றிருந்தேன் செய்யுந் தொழிலும் கண்டிருந்தேன்; ‘அண்ணா மெல்ல மெல்ல’ என - அமைந்து அழுகைக் குரல்கேட்டேன், கண்ணிற் காணா நாவாலே களிமண் கரைவது எனவுணர்ந்தேன். | 29 |
1699 | | ஊனார் உடலம் இதுவீழின் உண்டாம் வாழ்வின் நிலையறிய ஆனா ஆசை மிகவேஎன் ஆன்மா வினையான் வேண்டிநின்றேன்; நானா வுலகும் நெடுநாளாய் நாடி யலைந்து வந்ததுதான் ‘யானே சொர்க்கம் நரகமெலாம்’ என்றே கூறி நின்றதுவே. | 30 |
1700 | | வழியிற் குண்டு குழிவெட்டி, வலையுங் கட்டி, மதுவுண்டு, விழவோர் வீதியும் அந்நாளே விதித்து வைத்து, என் கேடெல்லாம், அழியாப் பாவம் அதனாலே ஆன விளைவென்று அறைவாயோ? தெளியாது உலகில் என்றென்றும் திகைத்து மறுகி நின்றேனே! | 31 |
1701 | | இற்ற மண்ணால் மனிதனையும் எழுப்பி ஈடன் ஆளவிட்டுச் சுற்றும் அரவும் அவ்விடத்தே சூதாய்ப் பதுங்க வைத்தவனே முற்றும் பாவி எனஅவன்தன் முகத்தில் கரியைப் பூசியஅக் குற்றம் நீங்க மன்னிப்புக் கொடுத்து நீயும் பெறுவாயே. | 32 | |
|
|