முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 365 |
Untitled Document
1686 | | போற்றும் இலங்கை அசோகவனம் போன இடமும் எவ்விடமோ? சீற்ற அரக்கர் கோனும், அவன் செங்கை வாளும் எங்கேயோ? ஏற்றும் திராட்சைக் கொடியின்னும் இனிய மதுவைத் தந்திடுமே; ஆற்றங் கரைப்பூஞ் சோலைமணம் அல்லும் பகலும் வீசிடுமே. | 17 |
1687 | | பாயும் வாய்க்கால் அருகிலெழும் பசிய கோரை அழகினைப்பார்; சாயும் வேளை மெதுவாகச் சாய்நீ, அப்பா! சொல்கின்றேன்; ஆயின் இதுவும் முன்னாளோர் அழகின் செல்வி அனுதினமும் நேய மாக நெய்பூசி நீட்டி வளர்த்த பூங்குழலே. | 18 |
1688 | | மண்ணில் மறையும் முடிமன்னர் வாழ்வும் அரிய வாழ்வாமோ? கண்ணிற் காணாச் சொர்க்கமுமோர் கனவே யன்றி நனவாமோ? நண்ணும் உன்கைப் பொருளதனை நம்பி யிருநீ, நண்ணாதது எண்ணி யெண்ணி எந்நாளும் ஏங்கி யலைவது ஏன்? ஐயா! | 19 |
1689 | | இன்றைக் கின்றைக் கென்றோயாது இரவும் பகலும் உழைத்திடுவீர்; அன்றி நாளைக் காமெனவே அலுப்பில் லாது முயன்றிடுவீர்; ஒன்று சொல்வன் உண்மைமொழி உறுதி யாகக் கொள்வீரே; என்றும் மூடர் நன்மையுமக்கு இங்கும் இல்லை அங்குமில்லை. | 20 | |
|
|