தமிழ்
முதலில் உண்டானது தழிழ்
|
புனல்சூழ்ந்து வடிந்து போன
நிலத்திலே "புதிய நாளை"
மனிதப் பைங்கூழ்முளைத்தே
வகுத்தது! மனித வாழ்வை,
இனியநற்மிழே நீதான்
எழுப்பினை! தழிழன் கண்ட
கனவுதான், இந்நாள் வையக்
கவின்வாழ்வாய் மலர்ந்ததன்றோ?
|
( 5 )
|
பழந்தழிழ் மக்கள் அந்நாள்
பறவைகள் விலங்கு, வண்டு,
தழைமூங்கில் இசைத்ததைத், தாம்
தழுவியே இசைத்ததாலே
எழும்இசைத் தழிழே! இன்பம்
எய்தியேகுதித்த தாலே
விழியுண்ணப் பிறந்த கூத்துத்
தமிழே!என் வியப்பின் வைப்பே!
|
( 10 )
( 15 )
|
அம்மாஎன்றழைத்தல்,
காகா
எனச்சொல்லல், அஃகென்று ஒன்றைச்
செம்மையிற் சுட்டல் என்னும்
இயற்கையின் செறிவினாலே
இம்மாநிலத்தை ஆண்ட
இயற்றமிழோன் அன்பே!
சும்மாதான் சொன்னார் உன்னை
ஒருவன்பால் துளிர்த்தாய் என்றே
|
( 20 )
|
தமிழர்க்கும் தமிழ், உயிர்
|
வளர்பிறை போல் வளர்ந்த
தமிழரில் அறிஞர் தங்கள்,
உளத்தையும், உலகின் ஆர்ந்த
வளத்தையும் எழுத்துச் சொல்லால்,
விளக்கிடும் இயல்முதிர்ந்தும்,
வீறுகொள் இசை யடைந்தும்,
அளப்யிலா உவகை ஆடல்
தமிழேநீ என்றன் ஆவி!
|
( 25 )
( 30 )
|
படுப்பினும் படாது, தீயர்
பன்னாளும் முன்னேற்றத்தைத்
தடுப்பினும், தமிழர் தங்கள்
தலைமுறை தலைமுறைவந்து
அடுக்கின்ற தமிழே! பின்னர்
அகத்தியர் காப்பியர்கள்
கெடுப்பினும் கெடாமல் நெஞ்சக்
கிளைதொத்தும் கிளியே வாழி!
|
( 35 )
( 40 )
|
இசையினைக் காணு கின்றேன்;
எண் நுட்பம் காணு கின்றேன்
அசைக்கொணாக் கல்தச் சர்கள்
ஆக்கிய பொருள்காண் கின்றேன்;
பசைப்பொருட் பாடல் ஆடல்
பார்க்கின்றேன்; ஓவியங்கள்
நசையுள்ள மருந்து வன்மை
பலபல நான்காண்கின்றேன்.
|
( 45 )
|
பன்னூறு நூற்றாண்டாகப்
பழந்தமிழ் மலையின் ஊற்றாய்
மன்னரின் காப்பினாலே,
வழிவழி வழாது வந்த
அன்னவை காணுகின்றேன்
ஆயினும் அவற்றைத் தந்த
முன்னூலை, அயலான், நஞ்சால்
முறித்ததும் காணுகின்றேன்!
|
( 50 )
( 55 )
|
வடக்கினில் தமிழர் வாழ்வை
வதக்கிப்,பின் தெற்கில் வந்தே
இடக்கினைச் செயநினைத்த
எதிரியை, அந்நாள் தொட்டே
"அடக்கடா" என்றுரைத்த
அறங்காக்கும் தமிழே! இங்குத்
தடைக்கற்கள் உண்டென்றாலும்
தடந்தோளுண்டெனச் சிரித்தாய்!
|
( 60 )
( 65 )
|
ஆளுவோர்க் காட்பட் டேனும்,
அரசியல் தலைமை கொள்ள
நாளுமே முயன்றார் தீயோர் :
தமிழேநீ நடுங்க வில்லை!
"வாளினை எடுங்கள் சாதி
மதம்இல்லை! தமிழர் பெற்ற
காளைகாள என்றாய்; காதில்
கடல்முழக்கத்தைக் கேட்டாய்!
|
( 70 )
|
இருளினை வறுமை நோயை
இடறுவேன்: என்னுடல்மேல்
உருள்கின்ற பகைக்குன்றைநான்
ஒருவனே உதிர்ப்பேன்; நீயோ
கருமான்செய் படையின் வீடு!
நான்அங்கோர் மறவன்! கன்னற்
பொருள்தரும் தமிழே நீ ஓர்
பூக்காடு; நானோர் தும்பி!
|
( 75 )
( 80 )
|
|
|
|