முழுவதும் அடங்கிய ஆய்வு தொகுப்பு | 273 |
Untitled Document | | நாலுகை யானை நடந்து கின்றேன்' என்றுதன் முதுகி லிருக்கும் ஈயொன்று எண்ணாது டம்பம் எடுத்துரைப்பது போல், | 1165 | | 'இரவு பகலும் இடைவி டாமல் பற்பல வருஷம் படித்து பீ.எல்., எம்.எல். பட்டம் எல்லாம் பெற்று வந்திடும் பெரிய வக்கீல் மாரும், யாங்க ளில்லையேல் என்செய் வார்?' எனப் | 1170 | | புத்தி யிலாது புலம்பித் திரியும் குமஸ்தா வெனும்ஈக் கூட்டம் உம்மைக் குத்தி ரத்தம் குடித்திடும், ஐயா! கோர்ட்டில் சென்று குதித்திட வேண்டாம்! குதித்துக் குடியைக் கெடுத்திட வேண்டாம்! | 1175 | | 'இன்ன படியென்று எழுதிவிட்ட சிவனே வரினும் சிறிதும் அஞ்சேன், விதியினுக்கு ஆயிரம் விக்கினம் சொல்வேன்; வருகிற வழியாய் வந்து எனைக் கண்டால் சிக்கெலாம் போக்கித் தீர்ப்பையும் நடத்தித் | 1180 | | தருவேன்' என்று சற்றும்வாய் கூசாது உரைக்கும் அந்த உத்தம புருஷன் நிறையா வயிற்றை நிறைத்திடக் கடலைத் திறந்து விட்டாலும் திகையுமோ? ஐயா! வீட்டை விட்டு வெளிவரா உமக்குக் | 1185 | | கோர்ட்டுக் காரியம் கொஞ்சமும் தெரியுமோ? பாரப் படிகளும் பட்டிகைப் படிகளும் சாக்ஷிப் படிகளும் சமன்ஸீப் படிகளும் கணக்கி லடங்காக் கமிஷன் படிகளும் ஜப்திப் படிகளும் லேலப் படிகளும் | 1190 | | வாறண்டுப் படிகளும் வாசற் படிகளும் ஏணிப் படிகளும், இப்படி அப்படி எல்லாப் படிகளும் ஏறி இறங்கி, வாணாள் கொடுத்து வாண தீர்த்தம் ஆட ஆளும் நீரோ? ஐயா! |
| |
|
|