தோத்திரப் பாடல்கள்
சக்திக்கு ஆத்ம சமர்ப்பணம்
[ராகம் -- பூபாளம்]
[தாளம் -- சதுச்ர ஏகம்]
கையைச், சக்தி
தனக்கே கருவியாக்கு -- அது
சாதனைகள் யாவினையுங் கூடும் -- கையைச்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சக்தியுற்றுக்
கல்லினையுஞ் சாடும். |
1 |
|
|
[முதற்
பதிப்பு]: ‘சக்தி தனக்கு’ |
|
|
|
|
கண்ணைச், சக்தி
தனக்கே கருவியாக்கு -- அது
சக்தி வழியினைஅது காணும் -- கண்ணைச்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சத்தியமும் நல்லருளும்
பூணும். |
2 |
|
|
செவி, சக்தி தனக்கே
கருவியாக்கு -- சிவ
சக்திசொலும் மொழியது கேட்கும் -- செவி
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சக்தி திருப் பாடலினை
வேட்கும். |
3 |
|
|
வாய், சக்தி தனக்கே
கருவியாக்கு -- சிவ
சக்தி புகழினையது முழங்கும் -- வாய்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சக்திநெறி யாவினையும்
வழங்கும். |
4 |
|
|
சிவ, சக்திதனை
நாசிநித்தம் முகரும் -- அதைச்
சக்தி தனக்கே கருவியாக்கு -- சிவ
சக்தி திருச் சுவையினை நுகரும் -- சிவ |
|
சக்தி தனக்கே
எமது நாக்கு. |
5 |
|
|
மெய்யைச், சக்தி
தனக்கே கருவியாக்கு -- சிவ
சக்திதருந் திறனதி லேறும் -- மெய்யைச்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சாதலற்ற
வழியினைத் தேறும். |
6 |
|
|
கண்டம், சக்தி
தனக்கே கருவியாக்கு -- அது
சந்ததமும் நல்லமுதைப் பாடும் -- கண்டம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சக்தியுடன் என்றும்
உற வாடும். |
7 |
|
|
தோள், சக்தி
தனக்கே கருவியாக்கு -- அது
தாரணியும் மேலுலகுந் தாங்கும் -- தோள்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சக்திபெற்று மேருவென
ஓங்கும். |
8 |
|
|
நெஞ்சம், சக்தி
தனக்கே கருவியாக்கு -- அது
சக்தியுற நித்தம் விரிவாகும் -- நெஞ்சம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அதைத் |
|
தாக்கவரும் வாளொதுங்கிப்
போகும். |
9 |
|
சிவ, சக்தி தனக்கே
எமது வயிறு -- அது
சாம்பரையும் நல்லவுண வாக்கும் -- சிவ
சக்தி தனக்கே எமது வயிறு -- அது |
|
சக்திபெற உடலினைக்
காக்கும். |
10 |
|
|
இடை, சக்தி தனக்கே
கருவியாக்கு -- நல்ல
சக்தியுள்ள சந்ததிகள் தோன்றும் -- இடை
சக்தி தனக்கே கருவியாக்கு -- நின்றன் |
|
சாதிமுற்றும் நல்லறத்தில்
ஊன்றும். |
11 |
|
|
கால், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சாடியெழு கடலையும் தாவும் -- கால்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சஞ்சலமில் லாமலெங்கும்
மேவும். |
12 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சஞ்சலங்கள் தீர்ந்தொருமை கூடும் -- மனம்
சக்திதனக்கே கருவியாக்கு -- அது |
|
சாத்துவிகத் தன்மையினைச்
சூடும். |
13 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சக்தியற்ற சிந்தனைகள் தீரும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சாருநல்ல உறுதியுஞ்
சீரும். |
14 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சக்திசக்தி சக்தியென்று பேசும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அதில் |
|
சார்ந்திருக்கும்
நல்லுறவும் தேசும். |
15 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சக்தி நுட்பம் யாவினையும் நாடும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
சக்திசக்தி யென்றுகுதித்
தாடும். |
16 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சக்தியினை எத்திசையும் சேர்க்கும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அது |
|
தான் விரும்பில்
மாமலையைப் பேர்க்கும். |
17 |
|
|
[பாட
பேதம்]: ‘சஞ்சலமில் லாமலெங்கும் மேவும்.’
-- கவிமணி |
|
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- அது
சந்ததமும் சக்திதனைச் சூழும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- அதில் |
|
சாவுபெறும் தீவினையும்
ஊழும். |
18 |
|
|
மனம், சக்தி தனக்கே
உரிமையாக்கு -- எதைத்
தான் விரும்பி னாலும்வந்து சேரும் -- மனம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- உடல் |
|
தன்னிலுயர் சக்திவந்து
நேரும். |
19 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- இந்தத்
தாரணியில் நூறுவய தாகும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- உன்னைச் |
|
சாரவந்த நோயழிந்து
போகும். |
20 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- தோள்
சக்திபெற்று நல்லதொழில் செய்யும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- எங்கும |
|
சக்தியருள் மாரிவந்து
பெய்யும். |
21 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- சிவ
சக்தி நடை யாவும் நன்கு பழகும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- முகம் |
|
சார்ந்திருக்கும்
நல்லருளும் அழகும். |
22 |
|
|
மனம், சக்தி தனக்கே
கருவியாக்கு -- உயர்
சாத்திரங்கள் யாவுநன்கு தெரியும் -- மனம்
சக்தி தனக்கே கருவியாக்கு -- நல்ல |
|
சத்திய விளக்கு
நித்தம் எரியும். |
23 |
|
|
சித்தம், சக்தி
தனக்கே உரிமையாக்கு -- நல்ல
தாளவகை சந்தவகை காட்டும் -- சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- அதில் |
|
சாரும் நல்ல வார்த்தைகளும்
பாட்டும். |
24 |
|
|
சித்தம், சக்தி
தனக்கே உரிமையாக்கு -- அது
சக்தியையெல் லோர்க்குமுணர் வுறுத்தும் -- சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது |
|
சக்திபுகழ் திக்கனைத்தும்
நிறுத்தும். |
25 |
|
|
சித்தம், சக்தி
தனக்கே உரிமையாக்கு -- அது
சக்திசக்தி யென்று குழலூதும்-சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- அதில் |
|
சார்வதில்லை அச்சமுடன்
சூதும். |
26 |
|
|
சித்தம், சக்தி
தனக்கே உரிமையாக்கு -- அது
சக்தியென்று வீணைதனில் பேசும் -- சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது |
|
சக்திபரி மளமிங்கு
வீசும். |
27 |
|
சித்தம், சக்தி
தனக்கே உரிமையாக்கு -- அது
சக்தியென்று தாளமிட்டு முழக்கும் -- சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது |
|
சஞ்சலங்கள் யாவினையும்
அழிக்கும். |
28 |
|
|
சித்தம், சக்தி தனக்கே உரிமையாக்கு
-- அது
சக்திவந்து கோட்டைகட்டி வாழும் -- சித்தம்
சக்தி தனக்கே உரிமையாக்கு -- அது |
|
சக்தியருட் சித்திரத்தில் ஆழும்.
|
29 |
|
|
மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
சங்கடங்கள் யாவினையும் உடைக்கும்-மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அங்குச் |
|
சத்தியமும் நல்லறமும் கிடைக்கும்.
|
30 |
|
|
மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
சாரவருந் தீமைகளை விலக்கும் -- மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது |
|
சஞ்சலப் பிசாசுகளைக் கலக்கும்.
|
31 |
|
|
மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
சக்திசெய்யும் விந்தைகளைத் தேடும் -- மதி
சக்திதனக்கே உடைமையாக்கு -- அது |
|
சக்தியுறை விடங்களை நாடும்.
|
32 |
|
|
மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
தர்க்கமெனுங் காட்டிலச்சம் நீங்கும் -- மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அதில் |
|
தள்ளிவிடும் பொய்ந்நெறியும்
தீங்கும். |
33 |
|
|
மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அதில்
சஞ்சலத்தின் தீயவிருள் விலகும் -- மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அதில் |
|
சக்தியொளி நித்தமுநின் றிலகும்.
|
34 |
|
|
மதி, சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அதில்
சார்வதில்லை ஐயமெனும் பாம்பு -- மதி
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அங்கு |
|
தான்முளைக்கும் முக்திவிதைக்
காம்பு. |
35 |
|
|
மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு
-- அது
தாரணியி லன்புநிலை நாட்டும் -- மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது |
|
சர்வசிவ சக்தியினைக் காட்டும்.
|
36 |
|
|
மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு
-- அது
சக்திதிரு வருளினைச் சேர்க்கும் -- மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது |
|
தாமதப் பொய்த் தீமைகளைப்
பேர்க்கும். |
37 |
|
மதி, சக்தி தனக்கே
அடிமையாக்கு -- அது
சத்தியத்தின் வெல்கொடியை நாட்டும் -- மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது |
|
தாக்கவரும் பொய்ப்புலியை
ஓட்டும். |
38
|
|
|
மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு
-- அது
சத்தியநல் லிரவியைக் காட்டும் -- மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு -- அதில் |
|
சாரவரும் புயல்களை வாட்டும்.
|
39 |
|
|
மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு
-- அது
சக்திவிர தத்தையென்றும், பூணும் -- மதி
சக்திவிர தத்தை யென்றுங் காத்தால் |
|
சக்திதரும் இன்பமும் நல் லூணும்.
|
40 |
|
|
மதி, சக்தி தனக்கே அடிமையாக்கு
-- தெளி
தந்தமுதப் பொய்கையென ஒளிரும் -- மதி
சக்தி தனக்கே அடிமையாக்கு -- அது |
|
சந்ததமும் இன்பமுற மிளிரும்.
|
41 |
|
|
அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
தன்னையொரு சக்தியென்று தேரும் -- அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது |
|
தாமதமும் ஆணவமும் தீரும். |
42 |
|
|
அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
தன்னையவள் கோயிலென்று காணும்-அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது |
|
தன்னையெண்ணித் துன்பமுற நாணும்.
|
43 |
|
|
அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு
-- அது
சக்தியெனும் கடலிலோர் திவலை -- அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு -- சிவ |
|
சக்தியுண்டு நமக்கில்லை கவலை.
|
44 |
|
|
அகம், சக்தி தனக்கே உடைமையாக்கு-அதில்
சக்திசிவ நாதநித்தம் ஒலிக்கும் -- அகம்
சக்தி தனக்கே உடைமையாக்கு -- அது |
|
சக்தி திரு மேனியொளி ஜ்வலிக்கும்.
|
45 |
|
|
சிவ, சக்திஎன்றும் வாழிஎன்று
பாடு -- சிவ
சக்திசக்தி என்றுகுதித் தாடு -- சிவ
சக்திஎன்றும் வாழிஎன்று பாடு -- சிவ |
|
சக்திசக்தி என்றுவிளை யாடு. |
46 |
|
|
|
|