Untitled Document
காதல் பாடல்கள்
அழகு தவழ் மங்கை பழகு தமிழ் போன்றாள்
|
அவளின்
அழகு
வஞ்சிக்கொடி போல இடை
அஞ்சத்தகு மாறுளது
நஞ்சுக்கிணையோ, அலது
அம்புக்கிணையோ, உலவு
கெண்டைக்கிணையோ கரிய
வண்டுக்கிணையோ, விழிகள்
மங்கைக்கிணை ஏதுலகில்
அங்கைக்கிணையோ மலரும்?
வானரசு தானிலவு போலுலக மாதரசு
நானினிது வாழும்வகை ஆனதிரு வானஉரு
மேனி அதுவோ அமிழ்து, வீசுமண மோமிகுதி
கானிடை உலாவுமயில் தானுமெனையே அணைய
--
நினையாளோ?
|
( 5 )
( 10 ) |
Untitled Document
கொஞ்சுப்பரி மாறுமொழி
பண்டைத்தமிழோ, அலது
கொம்பிற்கனி யோ எளிதில்
உண்டற் கமுதோ, அரசி
மிஞ்சிச்சுவை தோய்உதடு
பஞ்சைக்கொரு வாழ்வினிய
கொண்டற்கிணை யானகுழல்
இன்பச்சுனை யாடுவது
கூடுமெனிலோ பெரியபேறு பெறுவேன் அலது
நீடுதுயரே அடைவேன் ஈடுசொலவோ அரிது,
தேடுபொருள் யாதுமிலை, சீருமிவளே, உறவு
யாவுமிவளே, இனிய தேனிவளில் ஈ எனவும்
--
அமிழ்வேனோ
பஞ்சுக்கிணை யான அடி
அன்புக்குரி தானதுணை
மின்பட்டது போல்மெருகு
பொன்பட்டது போல் ஒளிசெய்
அன்புற்றிடு மாது நகை
இன்புற்றிடு மாறுளது
பண்புக்கினிதாய் ஒழுகும்
நண்புக்கினி யான் எழுது
பாடலவள் நான்ந(ல்)லுரை ஆடலவள் நானடையும்
ஓடைமல ரே அரசி ஊறுமணம் நானுமதில்
நீடவரும் யாழுமவள், நீர்மை இசை நான்அதனில்
ஈடுபடு மேனியவள் ஏழைஅதில் ஆவிஎன
--
அமைவாளோ
|
( 15 )
( 20 )
( 25 )
( 30 )
( 35 )
( 40 ) |
நெஞ்சிற்குடி
யேறிநிலை
நின்றிட்டன ளே உயிரில்
அஞ்சத்தகு மோஅவளின்
அண்டைச்செல வேஇனியும்
என்சொற்படியே அவளும்
இன்சொற் சொலுமோ அலது
வன்சொற் சொலுமோ அழகு
மங்கைக்கெவர் போயறைவர்?
மானமவளே, எனதின் ஊனுமவளே. எனுயிர்
தானுமவளே, புகழ்மை மானமவளே, கொடிய
ஏழமை எலாமரசி தோழமையினா லொழியும்
மாமழையி னாலுலகு தானமழையுமாறு நலம்
--
அருள்வாளோ ?
|
( 45 )
( 50 )
|
தகவல் தெரியவில்லை -- அவளின்
முகவரி அறிந்துவா ஒற்றா! (தகவல்)
அகல நெற்றி நிலாப்பிறை! கண்கள்
அப்பட்டம் ஒப்பற்ற நீலம்! (தகவல்)
முகம், அன்றவர்ந்தசெந் தாமரை! -- எழில்
முத்தைப் பழித்த பற்கள்!
தகுமேனி பத்தரை மாற்றுத் தங்கம் -- அவள்
சரிகுழல் மலையின்வீழ் அருவி?
புகை வண்டியில் என் மேற் புன்னகை
பொழிந்து நடுவே இழிந்து போனாள். (தகவல்)
எதிரில்வந் தமர்ந்தாள் அப் பாவை -- அடடா
அதைவிட எனக்கென்ன தேவை?
சிதைந்தது முதற்பார்வை? -- காதற்
சிரிப்போடு பார்த்தாள் பிற்பாடு!
மிதந்து வந்த தங்கத் தோணி எனைவிட்டு
மறைந்தது! காதல் வெள்ளத்தில் நொந்தேன், (தகவல்)
சென்ற புகைவண்டி நில்லாது சென்றால் -- அங்கே
தெரிவை இறங்கா திருப்பாள் -- நானோ
தின்றால் உயிர்வாழ்வேன் கொல்லிமலைச்
செவ்வாழைக் கனிச்சுவை இதழை!
அன்னவள் என்னுளத் தழுத்திய உருவின் -- நல்ல
அடையாளப்படி தேடிவா! (தகவல்)
|
( 55 )
( 60 )
( 65 )
( 70 )
( 75 )
|
பறந்து
வந்த கிளியே!
திறந்த என் மனக்கூடு புகுவாய்!
பறந்து வந்த கிளியே?
பிறந்த பெண்கள் பல கோடி -- உன்போல்
பெண்ணொருத்தி தேடி -- நான்
இறந்துபோகுமுன் னாடி -- மில
எழில் சுமந்தபடி என்னை நாடிப்
பறந்து வந்த கிளியே!
பெற்றெடுத்த ஒரு பொன்னை -- மண்மேல்
பிரிந்த தென்ன அன்னை!
கற்றுணர்ந்த என்னை -- நீ
கண்டதில்லை எனினும் என் முன்னே
பறந்து வந்த கிளியே!
இலங்கைதனில்இருந் தாயா? -- அவர்செய்
இழிவு கண்டு நைந் தாயா? -- நீ
கலங்கி இங்குவந் தாயா? -- என்
கைகள் உன்னைக் காவாத தீயா?
பறந்து வந்த கிளியே!
உள்ள குறைகள் நான் தீர்ப்பேன் -- தமிழ்
உலகை மீட்டுக் காப்பேன்.
தெள்ளு தமிழர் எங்கிருந்தாலும் -- அவர்க்குத்
தீமை செய்வாரை ஒருகை பார்ப்பேன்.
பறந்து வந்த கிளியே! |
( 80 )
( 85 )
( 90 )
( 95 )
|
கொஞ்சும்
-- கிளிக்கும்கொப் பளிக்கும்என் காது!
நில -- வொளிக்கும் தத்தளிக்கும் இம் மாது!
தென்றல் -- தெளிக்கும் கனலைஎன் மேலே
மிகப் -- புளிக்கும், இனிக்கும் பசும் பாலே
அதோ -- விளிக்கும் நெருங்கி எனைச் சாவே
நான் -- களிக்க வருக என்ஐயாவே!
பூத் -- துளிக்கும் தேனும்படு வேம்பு
நான் -- குளிக்கும் புனலும் கொடும் பாம்பு
வந்து -- சுளிக்கும் முகத்தைஎன் வாழ்வே
நான் -- சுளிக்க வருக என்ஐயாவே! |
( 100 )
( 105 )
( 110 ) |
சிரிப்பே குத்தகைக் சீட்டு
|
சோலை
வழியில்
தொடுக்கும் மணிக்கிளைசூழ்
ஆலின் அடியில்
அமைந்தி்ட்ட திண்ணையிலே
நண்பன் வருகையினை
நான்பார்த் திருக்கையிலே
வெண்பல்லைப் பூவிதலால்
மூடியொரு மெல்லிதான்
போனாள் இடதுகை
பொற்குடத்தைப் போட்டணைத்தே
நானே அப் பொற்குடமாய்
நாட்டில் பிறந்தேனா?
தோகையவள் போகையிலே
துள்ளும் வளர்ப்புமான்
பாகல் கடித்த
படிகசப்பால் ஓடிவந்தே
அன்னாளை அண்டி
அழகு முகம் எடுக்கப்
பொன்னான முத்தமொன்று
பூவை கொடுத்தாளே,
அந்தமான் நானாய்
அமைந்தேனோ? இல்லையே!
எந்த வகையிலே
ஏந்திழையை நான்பிரிவேன்?
நீர்கொண்டு நேரில்வரும் நேரிழையைக் கண்டணைத்தாள்
பேர்கொண்ட நேரிழையாள்
பெற்றதைநான் பெற்றேனா!
மங்கை வழிநடந்து
சோலை மணிக்குளத்தில்
தங்குநீர் வெள்ளம்
தழுவி மலர்மேனி
ஆழம் மறைக்க
அவள் மூழ்கி னாள் அந்த
ஆழப் புனலும் நான்
ஆனேனா? இல்லையே
தாழ உடைஉடுத்துத்
தண்ணீர்க் குடம்தாங்கி
வந்தாள். வரும்வழியில்
வந்துநான் காத்திருந்தே
செந்தாழை பூத்துச்
சிரிக்கச் சிரிப்பொலியாய்ப்
பொற்பொடியை உணடள்ளிப்
பூவை வழிமறைக்க
நற்கையால் தான்துடைத்தாள்,
நான்நிற்பதைக்கண்டாள்.
கொந்தெடுத்த கோவைப்
பழஉதடு தான் திறந்தே
முத்தெடுத்து நான்மகிழ
முன்வைத்தாள்! அன்பின்
இருப்பெல்வாம் நீஆள்க
என்றாள்! அவளின்
சிரிப்பதற்குக் குத்தகைச்
சீட்டு! |
( 115 )
( 120 )
( 125 )
( 130 )
( 135 )
( 140 )
( 145 )
( 150 )
( 155 )
( 160 )
|
கொஞ்சாமை
ஒன்று மகிழாமை
ஒன்று குளிர் தமிழால்
கெஞ்சாமை ஒன்று கிடவாமை
ஒன்று கிளைஞர் தமக்கு
அஞ்சாமை ஒன்றாசை ஆற்றாமை
ஒன்றதன் மேலுமின்றே
துஞ்சாமை பாடையில் தூக்காமை
உண்டு துடிஇடைக்கே.
|
(
165 )
( 170 ) |
பாராமை
ஒன்று பகராமை
ஒன்றுகைப்பற்றிஎனைச்
சேராமை ஒன்று சிறவாமை
வாழ்விற் சிறப்பளிக்க
வாராமை ஒன்று மகிழாமை
ஒன்று வரவிடுத்தாய்
ஓராமையேபொறேன் ஆறாமை
யேற்றினை ஓண்டொடியே! |
( 175 )
( 180 ) |
சரிதாண்டி
போடி -- அடி
தங்க வானம்பாடி
சரிதாண்டி போடி!
சிரிக்கும் பாவை, நடை ஓவியம்,
செந்தேன் என்று நினைத்தேன் -- நீ
திரும்பிப் பார்க்க மறத்து விட்டாய்
திடுக்கிட்டு மனம் கொதித்தேன்
பருக்கைக் கல்லும் உருகிவிடும்
பாட்டில் ஒன்று கேட்டால் -- அப்
பைந்தமிழின் அருளுண்டு
கையில் இறகும் உண்டு! (சரிதாண்டி)
பச்சிளநீர், வெண்ணிலவு,
பாங்கி என்று நினைத்தேன் -- எனைப்
பார்த்திடவும் மறுத்து விட்டாய்
பதறி மனம் கொதித்தேன்
நச்சரவும் மகிழ்ந்திருக்கும்
நாட்டுப் பாட்டுக் கேட்டால் -- அந்த
நற்றமிழின் அருளுண்டு
கையில் இறகும் உண்டு! (சரிதாண்டி)
தேனருவி, பூந்தோட்டம்,
செல்வம் என்று நினைத்தேன் -- நீ
சிறிது பேச மறுத்துவிட்டாய்
தீயால் நெஞ்சு கொதித்தேன்,
ஆனை ஒன்றும் மதம் அடங்கும்
அருமைப் பாட்டைக் கேட்டால் -- அவ்
அன்னை தமிழ் அருளுண்டு
கையில் இறகும் உண்டு! (சரிதாண்டி) |
( 185 )
( 190 )
( 195 )
( 200 )
( 205 )
|
நூறா
யிரமும் என்நோய் போக்காது
பேறெனில் அவளன்பு பெறுவ தாகும்
அன்னவன் புன்னகை மின் விளக்கு
மன்னும்என் காதல் வாழ்வுக்குப் போதுமே! |
( 210 ) |
அவன்
மேல் தானே நானே
ஆசை வைத்தேன் மானே! (அவன்
மேல்)
கவலை மாட்டை ஓட்டிச் சென்றான்
கண்ணை அதோ காட்டிச் சென்றான் (அவன் மேல்)
முல்லை மலர் ஏந்தி வந்து
முன் அதற்கு முத்தந் தந்து
அல்லல் எல்லாம் கண்ணிற் காட்டி
அகன்றிடுவான் உள்ளம் நொந்து. (அவன் மேல்)
ஆடச் சென்றால் அங்கிருப்பான்
அருமை கண்டால் அவன் சிரிப்பான்
கூடைப் பூவை என் எதிரில்
கொண்டு வந்து கடை விரிப்பான்! (அவன் மேல்)
புதிய புதிய வெளியீடு
போட்ட விலை மதிப் போடு
மிதி வண்டியில் வாங்கி வந்து
மிகக் கொடுத்தல் அவன்பாடு! (அவன்
மேல்)
வழுக்கிய குளத்துப்படி
வந்தணைத்தான் அதே நொடி
மழையும் பயிரும் அவனும் நானும்
மறைப்பதென்றால் அது எப்படி? (அவன் மேல்) |
( 215 )
( 220 )
( 225 )
( 230 ) |
நான் உன்னைக்
காதலித்தால்
நீ என்னைக் காதலிப்பாய்;
தேனும் தினையாவோம் என்று
தென் பாங்கிசை பாடவில்லை தோழி -- இதைத்
தெரிந்துகொள் புரிந்துகொள் தோழி!
காதலிப்ப தென்இயற்கை
காதலிலே உன்னையன்றி
மாதரசி வேறறியேன்!
மதிபோன்ற நின்முகத்தின் சிரிப்பு -- எனை
மதிமயக்கும் அன்பின் வலைவிரிப்பு!
உன்னைக் காணும் பொருட்டுநான்
ஓடிவரும் அருவியன்றி
என்னை உன்முன் காட்டுதற்காய்
என்றும் வந்து நிற்கமாட்டேன் தோழி -- நமை
ஒன்றிணைத்த இயற்கைத்தாய் வாழி! |
( 230 )
( 235 )
( 240 ) |
கூடத்திலே
வந்த மாடப்புறா! -- கூடிக்
கொஞ்சும் கிளி என்னை வஞ்சிப்பதா?
கூடத்திலே வந்த மாடப்புறா?
மன மாடத்தில் எரியும் மணிவிளக்கே!
வாராய் என் பசிக்கே உணவளிக்க,
கூடத்திலே வந்த மாடப்புறா!
கோடைதனைத் தணிக்கும் மலர்ச்சோலை -- உன்
கூந்தல் பறக்குமா என்மேலே?
ஆடை அழைத்ததடி நமை மாலை
அதைவிட உனக்கிங்கே என்ன வேலை?
கூடத்திலே வந்த மாடப்புறா!
சிரிப்புக்கு முகத்தினில் என்ன பஞ்சம்?
தீயாய் இருக்குமோடி உன் நெஞ்சம்!
திருப்படி சேயிழை உன் முகத்தைக் கொஞ்சம்
சிலம்பு பாடும் அடிக் கடியேன் தஞ்சம்!
கூடத்திலே வந்த மாடப்புறா!
தானே கனியவேண்டும் நெஞ்சக்கனி
தடிகொண்டு கனிவிக்கலாமோ? இனி
மானே, அகப்பட்டாய் என்னிடத்தினில்
வா நாம் இவ்விடத்தில் தன்னந் தனி!
கூடத்திலே வந்த மாடப்புறா!
|
( 245 )
( 250 )
( 255 )
( 260 ) |
நேற்று வந்தேன்
இல்லையே -- நான்!
நீ இல்லையே!
காற்றுவந்த சோலையில் எனைக்
கண்டுசிரித்த முல்லையே! (நேற்று)
ஆற்றங்கரையின் ஓரம் -- மாலை
ஆறுமணி நேரம் -- நீ
வீற்றிருப்பாய் என நினைத்தேன்
விளைத்தாய் நெஞ்சில் ஆரவாரம்! (நேற்று)
புல்லாங்குழல் சொல்லை -- உன்
புருவமான வில்லை -- முத்துப்
பல்லை, இதழை, முகத்தைத் தேடிப்
பார்த்தேன் இல்லை -- பட்டேன் தொல்லை. (நேற்று)
இன்பமான நிலவு -- நீ
என்னைப்பற்றி உலவு -- நான்
துன்பப்பட்ட நேரமெல்லாம்
தொலைந்தது பார்; கொஞ்சிக் குலவு!
நேற்றுவந்தேன் இல்லையே -- நீ
இல்லையே! |
( 265 )
( 270 )
( 280 )
|
அன்புடையாளே
அருமைத்தோழி
;
என்னைப்பற்றி
நினைக்காதே!
உன்றன் கருத்தை
ஒப்பும்
படி நீ
அறிவுரை
ஏதும்
உரைக்காதே?
உயிரும் உணர்வும்
உள்ளத்துள்ளே
ஓங்கும்
புயலாய்
அடிக்கிறது!
உயரும் காதல்
உணர்ச்சி
நெருப்பாய்
ஓன்றையும்
காணா
துயர்கிறது!
சாதி, குலம், மதம்,
சீலம்,
மானம்
சார்ந்த
காதல தீயினிலே
வேதியனைப்போல்
விரகிட்டல்ல
காதல்
தீயில்
எரித்திட்டேன்!
காதலை அறியாக்
கயவர்
கூட்டம்
கண்டதையெல்லாம்
கத்தட்டும்!
மோதும் அலையில்
உப்பைக்
கொட்டும்
மூடர்கள்
ஏதும்
செய்யட்டும்!
இளமை என்னும்
அருவிப்
பெண் நான்
இளைஞன்
என்னும்
பேராற்றில்
உளங்கொண்டாடி
என்னை
இழந்தேன்!
ஊராராம்
நாய்
குலைக்கட்டும்.
உண்ணும் போதும்
உயிர்க்கும்
போதும்
காதலை
யன்றி
ஒன்றறியேன்!
பண்ணும் தொழிலில்
பாட்டிக்
காதல்
மன்னவனன்றி
வேறு அறியேன். |
( 285
)
( 290 )
( 295 )
( 300 )
( 305 )
( 310 )
( 315 )
( 320 )
( 325 )
( 330 ) |
ஆடுகின்ற
மாமயிலும்
பாடுகின்ற பூங்குயிலும்
கூடுகின்ற சிட்டுமவள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
கொண்டாட்டம் போடுவதும் யாம் யாம் யாம்!
தண்டமிழ்த்தேன் சொற்கரும்பு
கொண்டினிக்கும் குற்றாலம்
தொண்டை, தோளில்
பெண்கனியாள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
தொந்தரவில் உண்பதுவும் யாம் யாம் யாம்!
முத்துநிலா மூரலினாள்
முத்தழிழை வெல்லப் பார்ப்பாள்
கட்டளைக்கல் அழகியவள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
கள்மயக்கில் துள்ளுவதும் யாம் யாம் யாம்!
குறிஞ்சி நிலம்போல் நலத்தாள்
வெறிமுல்லைபோல் அழகாள்
முறிமருதம்போல் வளத்தாள் ஆம் ஆம் ஆம்! -- காதல்
முத்தெடுக்கும் இன்பக்கடல் யாம் யாம் யாம்!
|
( 335 )
( 340 )
( 345 ) |
அவள்;
என் உதட்டைக் கடித்தது
வண்டென்று எண்ணினேன்
நீங்கள் தாமா? -- அட!
அவன்;
பசிக்குக் கிடைத்தது பலாச்
சுளை என்று எண்ணினேன்
உன் உதடுதானா? -- அட!
|
( 350 )
( 355 ) |
தோப்புக்குள்ளே மாப்பிள்ளை
|
மாப்பிள்ளை
வந்தான் -- மாந்
தோப்பிலே நின்றான்
-- உன் (மாப்பிள்ளை வந்தான்)
கூப்பிடும்படி சொன்னான் உன்னை
கும்பிட்டானே அவனும் என்னை! (மாப்பிள்ளை வந்தான்)
தாய் விழித்தாலும் --
அவள்
வாய் மடித்தாலும் --
வழி
நாய் குலைத்தாலும் பொய்ப்
பேய் மறித்தாலும் நீ
போய்வா அவன் சாகுமுன்னே
பொய்யல்லவே என் பொன்னே! (மாப்பிள்ளை வந்தான்)
இருட்டிருந்தாலும் -- பாரை
உருட்டிருந்தாலும் -- வழியில்
திருட்டிருந்தாலும் --
வெளியில்
மருட்டிருந்தாலும் நீ
உயிருக்குத் தங்கக் கட்டி அவன்
உயிருக்கு நீ வெல்லக் கட்டி! (மாப்பிள்ளை வந்தான்)
மழை இருந்தாலும் -- கிளை
தழை விழுந்தாலும் --
அவன்
பிழை புரிந்தாலும் --
புலி
வழியில் வந்தாலும் அடி
அழகான மயிலே உன்மேல்
ஆசை வைத்தான் உண்மையிலே! (மாப்பிள்ளை வந்தான்)
மலை தடுத்தாலும் -- அருவி
அலை தடுத்தாலும் -- வழியின்
தொலை தடுத்தாலும் -- மனத்தின்
நிலை தடுத்தாலும் நீ
தலை காட்ட வேண்டும் அவன்
சாக்காட்டை நீக்க வேண்டும்! (மாப்பிள்ளை வந்தான்). |
( 360 )
( 365 )
( 370 )
( 375 )
( 380 ) |
ஒட்டாரம் செய்வது என் போங்காலம்
|
பட்டாணி
வன்னப் புதுச் சேலை -- அடி
கட்டாணி முத்தே உன் கையாலே -- எனைத்
தொட்டாலும் இனிக்கும் பூஞ்சோலை -- உடல்
பட்டாலும் மணக்கும்அன் பாலே!
எட்டாத தூரம் இருந் தாலும்உனை
எட்டும் என் நெஞ்சம் மேன்மேலும் -- அது
கட்டாயம் செய்திட வந்தாலும் -- நீ
ஒட்டாரம் செய்வதென் போங்காலம்!.
ஆவணி வந்தது செந்தேனே -- ஒரு
தாவணி யும்வாங்கி வந்தேனே -- எனைப்
போவென்று சொன்னாய் நொந்தேனே -- செத்துப்
போகவும் மனந்துணிந்தேனே.
பூவோடி விழிக் கெண்டையிலே? -- ஒரு
நோவோடி உன் தொண்டையிலே? -- நீ
வாவா என்றன் அண்டையிலே? -- என்று
கூவா யோகருங் குயிலே!
|
( 385 )
( 390 )
( 395 )
|
உண்டாலே
தேன் மலரின் தேன் -- இவள்
கண்டாலே தித்திக்கும் தேன்!
வண்டால் கெடாத தேன்!
வையம் காணாத தேன்!
மொண்டால்கு றையாத தேன்! -- நானே
மொய்த்தேன் பேராசை வைத்தேன்! (உண்)
கண்ணொவ் வொன்றும் பூவே
கை ஒவ்வொன்றும் பூவே
பொன்னுடம் பெல்லாம் பூவே -- நான்
பெறுவேன் அப்பூங் காவே!
ஆளுக்குக் குளிர் சோலை
தோளுக்குப்பூமாலை
நாளும் என் மனம் வெம்பாலை -- அதன்
நடுவில் அவள் கரும்பாலை? (உண்)
கோவைஇதழ் சுவையூட்டும்
கொஞ்சுமொழி அமுதூட்டும்
பாவிவைத்தேன் இதில் நாட்டம் -- காதற்
பசிக்கிவள் பழத்தோட்டம். (உண்)
|
( 400
)
( 405 )
( 410 )
( 415 )
|
தமிழ் மகளே வேண்டும் நீ
என்மேல் ஆசை வைக்காதே
|
அவன்;
என் மீதில் ஆசை வைக்காதே -- மயிலே
என்னைப் பார்த்தும் சிரிக்காதே
உன்மேல் நான் ஆசை வைக்கவில்லை -- நீதான்
உண்மையிலே தமிழ்மகள் இல்லை. ஆதலால் (என்மீதில்)
அவள்;
மக்களில் வேற்றுமை ஏது? -- காதல்
வாழ்க்கையிலே நாம்புகும் போது?
அக்கால மனிதரும் நாமோ? -- என்னை
அயலாள் என விலக்கிடலாமோ? உலகத்து மக்களில்
அவன்;
சாதிகள் வீழ்ந்திட வேண்டும் -- பெண்ணே
தமிழினமோ வாழ்ந்திட வேண்டும்?
மாதொருத்தி வேண்டும் எனக்கும் -- தமிழ்
மகளா யிருந்தால்தான் இனிக்கும்! ஆதலால், (என்மீதில்)
அவள்;
என் உதட்டில் கசிவதும் தேனே -- உண்மையில்
என் பேச்சும் உன் தமிழ்தானே?
பொன்னேட்டில் புகழ் தீட்டுவோம் -- இன்பப்
புதுவாழ்வை நிலை நாட்டுவோம்! உலகத்து மக்களில்
அவன்;
தமிழ், உடல், உயிர் யாண்டும் -- ஒரு
தமிழ்மகளாய்ப் பிறந்திட வேண்டும்
அமிழ்தில் நாளும்நான் மூழ்க -- எனக்
காசை உண்டு! தமிழகம் வாழ்க!
|
( 420 )
( 425 )
( 430 )
( 435 )
|
படித்தும்பந்
தடித்தும் இருந்தவள் தானே -- அந்தப்
பாவிஎன் உள்ளம் கவர்ந்தானே! (படித்தும்)
துடித்தறியாத உள்ளம் துடித்தது -- காளை
தொடுவதெப் போதடிஎன் தோளை? (படித்தும்)
விடிந்தால் அவன் உருவிலேஎன் விழிதிறக்கும் - என்
வேலைக்கிடையில் நினைவெல்லாம் எங்கோ பறக்கும்
கொடியவன் பிரிந்தான் என்பதால் என்னுளம்
இறக்கும் -- பின்
கொஞ்சவருவான் எனஅது மீண்டும் பிறக்கும் (படித்தும்)
மறந்திருக்கவோ என்னால் முடிவதும் இல்லை -- அந்த
வஞ்ச வண்டுக்கென் நெஞ்சந்தானே முல்லை!
உறங்கும்போதும் இமைக்குள்ளும் செய்குவான்
தொல்லை -- என்
ஒளிஇதழ் அடையுமா அவன்முத்துப் பல்லை? (படித்தும்)
காலைக் கதிர்வந்து பலகணி இடுக்கிலே சிரிக்கும் -- அது
காளை எட்டிப் பார்ப்பது போலவே இருக்கும்.
சோலைக் குளத்தில் செந்தாமரை இதழ்விரிக்கும் -- அது
தூயவன் முகமென என்உளம் ஆர்ப்பரிக்கும்! (படித்தும்)
|
( 440 )
( 445 )
( 450 )
( 455 ) |
|
|
|