பக்கம் எண் :

402கவிமணியின் கவிதைகள்

Untitled Document
சரணம்
ஆகாத குணமென்னை அண்டாமல் அணுகாமல்
     ஆட்சி புரிந்திடாமல்,
நீகாவ லாய்வந்ததென் நெஞ்சத் தவிசேறி
     நித்தமுந் தங்கி யங்கே
ஏகாதி பதியாக அரசாள என்மீ
     திரங்கி அருள்வா யெனில்,
நாகாதி பன்தாங்கு நாராயாணா! ரங்க
     நாதா! கருணாகரா! - இன்னும்
(எத்)
19. சுதந்திர சூரியன்
இராகம் - ரேவகுப்தி     தாளம் - ரூபகம்
பல்லவி
1803 சூரிய னுதித்தது பார்! - சுதந்திர
     சூரிய னுதித்தது பார்!

அநுபல்லவி

  சீரிய ஸர்வஜித் வருஷம்
     சிறந்த ஆடி முப்பதினில்
தேரும் முனிவர் அரவிந்தர்
     ஜன்ம நாளாம் திருநாளில்
(சூரிய)

சரணம்

  பார தத்தைச் சூழ்ந்த இருட்
     படலம் சிதறி ஒழிந்திடவே
வீர முரசம் முழங்கிடவே
     வெற்றிக் கொடிகள் பறந்திடவே
(சூரிய)
  புத்தம் புதிய கருத்துகள்
     புலவர் கவியில் பூத்திடவே
சித்தம் மகிழப் பூவையர்கள்
     தேவ கீதம் பாடிடவே
(சூரிய)